[[திருமால்|திருமாலுக்கும்]], பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் [[சிவன்|சிவபெருமானிடம்]] சென்று முறையிட்டனர். சிவனும் [[லிங்கோத்பவர்]] என்ற வடிவத்தில் எழுந்தருளி, நீங்கள் இருவரில் ஒருவர் எனதுதமது அடியையும், ஒருவர் எனதுதமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். திருமால் [[வராக அவதாரம்]] எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத திருமால், சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிராம்மபிரம்ம தேவரோ, [[அன்னம்|அன்னப் பறவை]] வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிருந்துதலையிலிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயனத்தினைபயணத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக,. சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றியதால் , [[பிட்சாடனார்]] என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
பிரம்மா தன்னைப்போலவே ஒரு மகனைப் படைக்கவிரும்பியதாகவும், அவருக்கு பிறந்தமகன் தனக்குதனக்குப் பெயரிட வேண்டுமென அழுததாகவும், அதனால் பிரம்மா [[ருத்திரன்]] என்று பெயரிட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ருத்திரன் அழுகை நிற்காததால், பிரம்மா ருத்திரன், பாவன், [[சிவன்]], [[பசுபதி]], [[ஈசன்]], [[பீமன்]], [[உக்கிரன்]], [[மகாதேவன்]] என அஷ்ட பெயர்களை ருத்திரனுக்கு சூட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன.
மகாபுராணங்களில் ஒன்றான பிரம்ம புராணம் பிரம்மாவின் தலையை சிவபெருமான் கொய்தமைக்கு வேறொரு கதையை கூறுகிறது. அதில் பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்று கழுதை முக வடிவில் இருந்தாக கூறப்பட்டுள்ளது. அந்த தலையானது தேவர்கள் மற்றும் அரக்கர்கள் போரில் அரக்கர்களுக்கு உதவி செய்வதாக கூறியதைக் கண்டு தேவர்கள் திருமாலிடம் அத்தலையை நீக்க வேண்டினர். ஆனால் திருமாலோ, அத்தலையானது பூலோகத்திலோ அல்லது வேறொங்குவேறெங்கோ விழுந்தால் விபரீதம் நேரிடும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை சிவபெருமானிடம் கோரிக்கை வைக்கும்படி கூறினார். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் பிரம்மாவின் கழுதை தலையை நீக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10856 பிரம்ம புராணம்</ref>