ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி LanguageTool: typo fix
வரிசை 8:
இன்று அணிகலன்கள் பெரும்பாலும் அழகுக்காகவே அணியப்படுகின்றன. இதனால், பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்திக் கலை அம்சங்களுடன் இன்றைய அணிகலன்கள் செய்யப்படுகின்றன. ஆனால், [[பேய்]], [[பிசாசு]], இயற்கைச் சக்திகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காகவே அணிகலன்கள் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு. நாகரிக வளர்ச்சியினால், அணிகலன்கள் அழகுப் பொருள்களாகவும் பயன்படத் தொடங்கின. எனினும், காப்புக்காக அணிகலன்களை அணியும் வழக்கமும் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. இன்றும் பல பண்பாடுகளில் வழக்கில் உள்ளது. ஐம்படைத் தாலி என்பதும் காவலுக்காக அணியப்பட்ட அணிகலன்களில் ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில், காப்புக்காக அணியப்படும் தாலிகள் தொடர்பான குறிப்புக்கள் புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலேயே காணப்பட்டாலும், ஐம்படைத் தாலி என்னும் பெயர் மணிமேகலையிலேயே முதன் முதலில் வருகின்றது.
 
ஐம்படைத் தாலி என்பது காவலாக ஆண் குழந்தைகளின் கழுத்தில் அணியும் ஒருவகை அணி என்றும், திருமாலின் கையிலுள்ளகையில் உள்ள ஆயுதங்களின் வடிவில் அமைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். காவலாக அணியப்படும் அணி என்பதும், ஆண் குழந்தைகள் அணிவது என்பதும் பழந் தமிழ் இலக்கியங்களில் இருந்துஇலக்கியங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், திருமாலின் ஆயுதங்களுடனான தொடர்பு குறித்துதொடர்புகுறித்து எவ்வித சான்றுகளும் பழைய தமிழ் இலக்கியங்களில் இல்லை. ஆண் குழந்தைகள் அணியும் காப்பணியைக் குறிப்பிடும்போது சங்க நூல்களாகிய அகநானூறும், புறநானூறும் வெறுமனே "தாலி" என்றே குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. ஐம்படைத் தாலி என்னும் பெயர் இலக்கியங்களில் வருவதற்கு முன்பே ஆயுதங்களின் போல்மங்களை சேர்த்துச் செய்யப்பட்ட அணிகள் பற்றியஅணிகள்பற்றிய குறிப்புக்கள் கலித்தொகை என்னும் நூலில் வருகின்றன<ref>கலித்தொகை, பாடல்கள் 85, 86</ref>. "படை" என்ற சொல்லையோ, "தாலி" என்ற சொல்லையோ பயன்படுத்தாமல் "அணி" என்ற சொல்லாலேயே இவற்றை இப்பாடல்கள் குறிக்கின்றன. கலித்தொகை குறிக்கும் மேற்படி அணிகள் தொடர்பான இன்னொரு வேறுபாடு இங்கே காணப்படும் ஆயுதங்கள் வாள், மழு என்னும் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே. அத்துடன், இவற்றோடு காளைச் சின்னமும் சேர்ந்திருப்பது இவ்வணி சைவச் சார்பு கொண்டதாக இருக்கலாம் என்னும் கருத்துக்கும் வித்திடுகின்றன.
 
காப்பணியாகக் குழந்தைகள் அணியும் அணியாகக் [[புலிப்பல் தாலி]] பற்றிய குறிப்புக்கள் அகநானூறு, [[குறுந்தொகை]], [[சிலப்பதிகாரம்]] போன்ற முற்பட்ட நூல்களில் காணப்படுவது, புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது என்ற கருத்துக் கொள்வதற்கு இடமளிக்கிறது. இதனால், புலிப்பல் தாலி அணியும் வழக்கத்தின் பிற்கால வளர்ச்சி நிலையிலேயே சமயச் சார்பு கொண்ட ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்<ref>காந்தி, க., 2008. பக்: 200</ref>.
 
==அணிதலும், களைதலும்==
ஆண் குழந்தைகளுக்கே பெற்றோர் ஐம்படைத் தாலி அணிவித்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம்இலக்கியங்கள்மூலம் அறிய முடிகின்றது. "கிருகியரத்தினம்" என்னும் வடமொழி நூல் பிறந்த ஐந்தாவது நாளில் குழந்தைகளுக்கு இதை அணிவிக்கவேண்டும்அணிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்தஇதுகுறித்த தகவல்கள் எதுவும் தமிழ் நூல்களில் இல்லை. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் [[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்]] மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக, "தாலி களைந்தன்று மிலனே" என்று அவன் தாலியை இன்னும் களையாத வயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு குறித்த வயதில் தாலியைக் கழைந்து விடுவது வழக்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் [[கழல்]] அணியும் வழக்கம் இருந்தது என உணர முடியும். இதனால், ஆண்களின் வளர்ச்சி நிலைகளைக் குறியீடாகக் காட்டுவதற்கு அணிகள் பயன்பட்டதையும், ஐம்படைத் தாலியும் அவ்வாறான ஒரு வளர்ச்சி நிலையின் குறியீடாக விளங்கியமையும் அறிய முடிகின்றது.
 
==தற்காலத்தில் ஐம்படைத் தாலி==
[[படிமம்:Jafna-Panchayutham.jpg|thumb|250px|பொன் சங்கிலியில் கோத்து அணியப்படும் யாழ்ப்பாணத்துப் பஞ்சாயுதப் பதக்கம் ஒன்று. கதாயுதத்திற்குப் பதிலாகபதிலாகச் சூலம் இருப்பதைக் கவனிக்கவும்.]]
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது. ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] நகைக் கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும். இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு. சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந் தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது<ref>டி சில்வா, நிமால்.; பத்திரன, கிராந்தி.; 2003. பக். 72</ref>. பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது. பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர். குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் [[துடக்குக் கழிவு]]ச் சடங்கின் போதுசடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது