ஆந்த்ரே-மாரி ஆம்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 21:
}}
'''ஆந்த்ரே-மாரி ஆம்பியர்''' ( ''André-Marie Ampère'', {{IPAc-en|ˈ|æ|m|p|ɪər}};<ref>[http://dictionary.reference.com/browse/ampere "Ampère"]. ''Random House Webster's Unabridged Dictionary.''</ref> {{IPA-fr|ɑ̃pɛʁ|lang}}; 20 சனவரி 1775 – 10 சூன் 1836)<ref>{{cite book|title=Dictionary of Scientific Biography|year=1970|publisher=Charles Scribner's Sons|location=United States of America}}</ref> [[பிரெஞ்சுக்காரர்|பிரான்சிய]] [[இயற்பியல்|இயற்பியலாளரும்]] [[கணிதவியலாளர்|கணிதவியலாளரும்]] ஆவார். பொதுவாக [[அறிவியல்|அறிவியலில்]] [[மரபார்ந்த இயக்க மின்னியல்]] எனப்படும் ''செவ்வியல் மின்காந்தவியல்'' பிரிவை நிறுவியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். [[மின்னோட்டம்|மின்னோட்டத்திற்கான]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகு]] இவர் நினைவாக [[ஆம்பியர்]] எனப் பெயரிடபட்டுள்ளது.
== வாழ்க்கை வரலாறு ==
ஆம்பியர் 1775ஆம் ஆண்டில் [[பிரான்சு|பிரான்சின்]] [[லியோன்|லியோனில்]] பிறந்தார். சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே [[இலத்தீன்]] கற்றுக் கொடுத்தார். [[கணிதம்|கணிதத்தில்]] நாட்டம் மிக்க ஆம்பியர் [[லியோனார்டு ஆய்லர்]], [[பெர்னோலி]] போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் இதனால் ஆம்பியர் கணிதத்தில் மட்டுமன்றி [[வரலாறு]], பயணங்கள், கவிதை, மெய்யியல், [[இயற்கை அறிவியல்]] ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்.
 
[[பிரெஞ்சுப் புரட்சி]] ஆண்டுகளில், ஆம்பியரின் தந்தையை புரட்சியாளர்கள் கொன்றனர். இது ஆம்பியர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1796இல் லியோனில் அண்மையில் வசித்த வந்த [[கொல்லர்]] குடும்பத்தின் சூலி கேரோனைச் சந்தித்தார். சந்திப்பு காதலாக மாற, 1799இல் இவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, ஆம்பியர் லியோனில் கணிதம், வேதியியல், மொழிகள் மற்றும் இயற்பியல் கற்பிக்கும் பேராசிரியராக வேலை செய்தார். 1803இல் தமது மனைவியின் மரணத்திற்கு பிறகும் இதே வேலையில் நீடித்திருந்தார். இருப்பினும் மனைவியின் இழப்பு அவரை வாழ்நாள் முழுமையும் வாட்டியது. [[மர்சேய்|மர்சேயில்]] உயிரிழந்த ஆம்பியர் பாரிசிலுள்ள ''சிமெட்டியர் டெ மோன்மார்த்ரெ''யில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
 
அவர் எழுதிய தன்வாழ்க்கை சரிதமான ''மடல்களும் பதிவேடும் '' (Journal et correspondence) அவரது குழந்தைத்தனமான பண்பையும் எளிமையையும் சித்தரிக்கிறது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்த்ரே-மாரி_ஆம்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது