குறவஞ்சி இலக்கியங்களுள் [[திருக்குற்றாலக்குறவஞ்சிதிருக்குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக்குறவஞ்சிக்குகுற்றாலக் குறவஞ்சிக்கு]] அடுத்தபடியாக அழகிலும் பொலிவிலும் சிறந்து விளங்குவது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். இது [[நாடகத்தமிழ்]] வகையைச் சேர்ந்தது என்பதால், அவ்வச்சாதியார், இடம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேசும் முறையில் சில சொற்களும், சொற்றொடர்களும் மரூஉ மொழிகளாகவும், கொச்சை மொழிகளாகவும், காணப்படுகின்றன. வதைக்குது, உதைக்குது, இருக்குது, பதறுதடி, கட்டலையோ, குத்தலையோ, வருகுது, நாலுகால், நாப்புக்காட்டி, பெருகுது, கேளடையே, தேடலை என்பன அவற்றுள் சிலவாகும். <ref name="manimaaran"/>