தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''தேவாரங்கள்''' [[சைவ சமயம்|சைவ சமய]]த்தின் [[கடவுள்|கடவுளான]] [[சிவபெருமான்]] மீது, [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], [[திருநாவுக்கரசு நாயனார்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்]] ஆகிய [[நாயன்மார்|நாயன்மாரா]]ல் [[தமிழ்|தமிழிற்]] பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் [[7ம் நூற்றாண்டு|கிபி 7ம் நூற்றாண்டி]]லும், மூன்றாமவர் [[8ம் நூற்றாண்டு|கிபி 8ம் நூற்றாண்டி]]லும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. [[பதிகம்]] என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
 
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே [[பல்லவர்]] ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த [[பௌத்த சமயம்|பௌத்தம்]], [[சமண சமயம்|சமணம்]] ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த [[கோயில்]]கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான [[சீர்காழி]]யிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/தேவாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது