சரபேந்திர பூபாலக் குறவஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சரபேந்திர பூபாலக் குறவஞ்சி''', [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] ஆட்சி செய்த [[இரண்டாம் சரபோஜி]]யைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். [[குறவஞ்சி]] என்பது பிற்காலத்தில் எழுந்த பல்வேறு வகைப்பட்ட பிரபந்தங்களில் ஒன்றாகும்.
 
== இயற்றியவர் ==
இதனை இயற்றியவர் [[கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்]] என்னும் பெரும் புலவர் ஆவார். இவர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] ஆட்சி செய்த [[இரண்டாம் சரபோஜி]] மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
 
== பாட்டுடைத்தலைவன் ==
சரபோஜி மன்னரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல், கற்போர் இலக்கியச் சுவை பெறும் வகையில் அமைந்துள்ளது.
<ref name="manimaaran"> பதிப்பாசிரியர் மணி.மாறன், சரபேந்திர பூபால குறவஞ்சி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013</ref>
 
== அமைப்பு ==
இடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கொண்டு கீர்த்தன வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. எளிய நடையில் அமைந்த இந்நாடகம் [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பெரிய கோயிலில்]] நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்ததால், இது ”அஷ்டக்கொடிக் குறவஞ்சி” என்றும் அழைக்கப்படுகிறது. <ref name="manimaaran" />
 
== சிறப்பு ==
குறவஞ்சி இலக்கியங்களுள் [[திருக்குற்றாலக் குறவஞ்சி|குற்றாலக் குறவஞ்சிக்கு]] அடுத்தபடியாக கருதப்படுகிறது சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும். இது நாடகத் [[தமிழ்]] வகையைச் சேர்ந்தது என்பதால், அவ்வச்சாதியார், இடம் முதலியவற்றிற்கு ஏற்பப் பேசும் முறையில் சில சொற்களும், சொற்றொடர்களும் மரூஉ மொழிகளாகவும், கொச்சை மொழிகளாகவும், காணப்படுகின்றன. வதைக்குது, உதைக்குது, இருக்குது, பதறுதடி, கட்டலையோ, குத்தலையோ, வருகுது, நாலுகால், நாப்புக்காட்டி, பெருகுது, கேளடையே, தேடலை என்பன அவற்றுள் சிலவாகும். <ref name="manimaaran" />
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சரபேந்திர_பூபாலக்_குறவஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது