கந்த சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''கந்த சஷ்டி''' என்பது [[முருகன்|முருகக் கடவுள்]] [[சூரபத்மன்|சூரனை]] அழித்த பெருமையை [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்கள்]] கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் [[ஆறு (எண்)|ஆறு]] ஆகும். [[ஐப்பசி]] மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.
 
== முருகன் சூரனை அழித்தல் ==
ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் [[மாம்பழம்|மா]] மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய [[வேல்|வேலினால்]] பிளந்தார். பிளவுபட்ட மாமரம் [[சேவல்|சேவலும்]] [[மயில்|மயிலுமாக]] மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது [[கந்தபுராணம்|கந்தபுராணத்தில்]] சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
 
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், [[சிங்கமுகன்]], [[தாரகாசுரன்]] ஆகியோர் முறையே [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்தில்]] பேசப்படும் [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] என்னும் [[மும்மலங்கள்|மும்மலங்களை]]க் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
 
== கந்த சஷ்டி விரதம் ==
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் [[பால்]], [[பழம்]] மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
 
வரிசை 15:
* [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்]]
 
== மேலும் காண்க ==
{{multicol}}
* [[சைவ விழாக்களின் பட்டியல்]]
வரிசை 31:
{{multicol-end}}
 
== வெளியிணைப்புகள் ==
* http://temple.dinamalar.com/New.php?id=967
 
== ஆதாரங்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
 
{{இந்து விழாக்கள்}}
 
 
[[பகுப்பு:கந்த விரதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது