நாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''நாடி''' என்பதும் ''நாழி, நாழிகை'' என்பதும் இந்திய துணைக்கண்டத்தில் பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கால அலகு ஆகும். ஒரு [[நாள்]] 60 நாடிகளாகப் (நாழிகைகளாகப்) பகுக்கப்பட்டுள்ளது. நாடி மேலும் 60 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இந்த ஒவ்வொரு உட்பிரிவும் [[விநாடி]] அல்லது ''நொடி'' எனப்படும்.
[[படிமம்:Panjangam1.jpg|thumb|350px|left| தற்கால தமிழ்ப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்கமொன்றில்]] மணி, மினிற்(மினிட்டு) கால அலகுகளுடன் நாடி, விநாடி கால அலகுகளிலும் தகவல்கள் தரப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.]]
தற்போது எங்கும் வழக்கிலுள்ள கால அளவுக் கணக்கில் ஒரு நாள் 24 மணி நேரம் கொண்டதாகும். இது 1440 (= 24 X 60) [[நிமிடங்கள்|நிமிடங்களுக்குச்]] சமன். எனவே ஒரு நாடி அல்லது நாழிகை என்பது '''24''' (24 X 60 / 60) நிமிடங்கள் கொண்டதாகும். மேற்கத்திய முறைகள் அறிமுகப் படுத்தப்படும் முன் நாடி, விநாடி அலகுகளே [[இந்தியா|இந்தியாவிலும்]]விலும், [[இலங்கை]] போன்ற அண்டை நாடுகளிலும் வழங்கி வந்தன. இன்றும் [[சோதிடம்]] முதலிய [[மரபு]] சார்ந்த துறைகளில் (திருமணம், குழந்தைப் பிறப்பு, இறந்தார் சடங்கு) நேரத்தைக்குறிக்க இவ்வலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
நாடி என்பதற்குப் பொருள்:
"நாடிநாழிகை நரம்பாம்" - "கடிகை நாழிகையே" - சூடாமணி நிகண்டு.
ஆக நாடி என்பதற்கு [[நரம்பு]] என்றொரு பொருள் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/நாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது