பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்ட சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி''' சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான். இவனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் நான்கு உள்ளன. [[இராசசூயம்]] என்பது நாட்டை விரிவுபடுத்த அரசன் செய்யும் வேள்வி.
*பகைநாட்டை இவன் பட்டப்பகலில் தீயிட்டுக் கொளுத்தியது ‘சுடுதீ விளக்கம்’ <ref>சுடாத தீ விளக்கம் ஞாயிறும் திங்களும்</ref> இவனது யானைகள் வள்ளை, ஆம்பல் பகன்றை, பாகல், கரும்பு நிறைந்த பகை நாட்டு வயல்களைப் பாழாக்கினவாம்.<ref>[[பாண்டரங் கண்ணனார்]] புறநானூறு 16</ref>
*இவனுக்கும், [[சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]க்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, [[காரி|மலையமான் திருமுடிக்காரி]] சோழனுக்கு உதவியாக நின்று போரிட்டுச் சோழனுக்கு வெற்றி உண்டாக்கியிருக்கிறான்.<ref>[[வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்]] புறநானூறு 125</ref>
*சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய இருவரும் இவனது நண்பர்கள். இவர்கள் பார்பனர் வளர்க்கும் முத்தீப் போல ஓரிடத்தில் கூடியிருந்தனர்.<ref>[[ஔவையார்]] புறநானூறு 367</ref>
*மணியும், முத்தும், பொன்னும் இரவலர்களுக்குக் கனவா நனவா என மருளும்படி வாரி வழங்கியவன்.<ref>[[உலோச்சனார்]] புறநானூறு 377</ref>
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}