காவலூர் ராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
|name =காவலூர் ராசதுரை
|image = Kavaloor Rajadurai 2.jpg
|caption =
|birth_name = மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை
|birth_date = {{birth date|1931|10|13}}
வரிசை 11:
|resting_place =
|resting_place_coordinates =
|nationality =
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
வரிசை 29:
'''காவலூர் ராசதுரை''' என அழைக்கப்படும் '''மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை''' (அக்டோபர் 13, 1931 - அக்டோபர் 14, 2014)<ref name="tm">{{cite web | url=http://www.tamilmurasuaustralia.com/2014/10/blog-post_14.html | title=மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார் | publisher=தமிழ்முரசு | date=15 அக்டோபர் 2014 | accessdate=15 அக்டோபர் 2014}}</ref> ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து [[ஆத்திரேலியா]]வில் [[சிட்னி]] நகரில் வாழ்ந்து வந்தவர். [[இலங்கை வானொலி|இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[ஊர்காவற்துறை]]யில் [[கரம்பொன்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.
 
== வானொலியில் ==
'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை அரங்கேற்றியவர்.
 
== எழுத்துத்துறை ==
[[சுதந்திரன்]], [[வீரகேசரி]], [[தினகரன்]] ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.
 
''தேவ கிருபையை முன்னிட்டு வாழும்'' என்ற சிறுகதை [[இலங்கை]]யில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை [[இந்தி]]யில் மொழி பெயர்க்கப்பட்டு ''தர்மயுக்'' என்ற இதழில் வெளியாகியது.
 
== நாடகத் துறை ==
இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.''காலங்கள்'' என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. ''வீடு யாருக்கு?'' என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.
 
== திரைப்படத் துறை ==
[[பொன்மணி]] என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.
 
[[யூனிசெப்]] நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக ''வசீகரா'' என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் [[கொழும்பு|கொழும்பில்]] நிறுவினார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
 
== வெளியிடப்பட்ட நூல்கள் ==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=ராசதுரை,_காவலூர்}}
* ''குழந்தை ஒரு தெய்வம்'' (சிறுகதைத் தொகுதி, [[1961]])
வரிசை 53:
* ''A Prophet Unhonoured'' (ஆங்கிலச் சிறுகதைகள்)
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/367347/t/-Kavaloor-Rajadurai-passed-away/in/language காவலூர் ராஜதுரை காலமானார் (13 அக் 1931–14 அக் 2014)], [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை|எஸ்பிஎஸ்]], அக்டோபர் 15, 2014
*[http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2055:2014-04-10-01-10-00&catid=52:2013-08-19-04-28-23 திரும்பிப் பார்க்கின்றேன்], [[லெ. முருகபூபதி]]
"https://ta.wikipedia.org/wiki/காவலூர்_ராசதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது