சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Suratha.jpg|thumb|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன் 19]], [[2006]]) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். புரட்சிக் கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை ''உவமைக் கவிஞர்'' என்று சிறப்பித்துக் கூறுவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 9:
 
==கவிதை இயற்றல்==
சுரதாவின் ''சொல்லடா'' என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்த்ததுசெய்தது.
 
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் [[தந்தை பெரியார்]], [[என். எஸ். கிருஷ்ணன்|கலைவாணர்]] முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]] இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
 
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ''தலைவன்'' இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் ''சிவாஜி'' இதழில் தொடக்கதொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
 
==திரைப்படத் துறையில்==
வரிசை 19:
 
==எழுத்துப்பணி==
சுரதாவின் முதல் நூல் ''[[சாவின் முத்தம்'']]. இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் [[முரசொலி (இதழ்)|முரசொலி]] இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
 
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
 
1971 ஆம் ஆண்டு [[ஆனந்தவிகடன்]] இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ''சுவரும் சுண்ணாம்பும்'' என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
 
பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா அவர்கள், பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
 
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
வரிசை 46:
 
==மறைவு==
இவர் தன்னுடைய 84ம் வயதில் 20.06.2006 இல்அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
==குடும்ப உறுப்பினர்கள்==
சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற ஒரே மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.
 
==சுரதாவின் படைப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சுரதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது