கே. பராசரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கே. பராசரன்''' (பிறப்பு 1927)இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான வழக்குகளில் வாதாடுவதில் இவருக்கு இணை இவர்தான் என பெயர் பெற்றவர்.
===வாழ்க்கை===
தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தை]] சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில் பிறந்த பராசரன், திருவள்ல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரிகளில் பயின்றார். பி.ஏ. படிப்பில் வடமொழி பாடத்தில் நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி பதக்கம்,சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி.பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைபெற்றார்.
 
===பணிகள்===
1958இல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு. 1971இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராதல், 1976 இல் தமிழகத்தின் அடவகேட் ஜெனரலானார்.1977இல் அப்பதவியிலிருந்து விலகினார். 1980-1983 வரை மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல். 1983இல் அட்டானி ஜெனரல். 1986 மற்றும்1989 இல் மீண்டும் அட்டானி ஜெனரல், 1984-1987 இல் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிமினால்ஜியன் தலைவர். 1984-1987 பார் அசோசியேசன் தலைவர்.
"https://ta.wikipedia.org/wiki/கே._பராசரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது