தொம்மாசோ கம்பனெல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
அங்கிருந்து விடுதலையான பின்னர் கலபிரியாவுக்குத் திரும்பிய அவர்மீது, தனது சொந்த ஊரில் இசுப்பானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இவரது இரண்டு கூட்டாளிகள் இவரைக் காட்டிக்கொடுத்ததன் பேரில் இவரைக் கைது செய்து நேப்பிள்சில் சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.<ref>C. Dentice di Accadia, Tommaso Campanella, 1921, pp. 43-44 (in Italian)</ref> முழுமையாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் இவருக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் பைத்தியம் போல் நடித்து அதிலிருந்து தப்பினார். ஆனாலும், இவர் மேலும் துன்புறுத்தப்பட்டார். ஊனமுற்று, நோயுற்ற அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கினர்.<ref>[http://www.jrank.org/literature/pages/15516/Tommaso-Campanella.html Tommaso Campanella Biography]</ref><ref>Norman Douglas, The Death of Western Culture</ref>
 
==ஆக்கங்கள்==
27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். ''இசுப்பெயினின் முடியாட்சி'' (1600), ''அரசியல் சூத்திரங்கள்'' (1601), ''நாத்திகம் வெல்லப்பட்டது'' (1605-1607), ''மெட்டாபிசிக்கா''
(1609-1623), ''தியோலொஜியா'' (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான ''சூரியனின் நகரம்'' முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொம்மாசோ_கம்பனெல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது