அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு
வரிசை 1:
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன் | அனந்தவர்மன் சோட(ழ)கங்கன்]], சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற [[மேலைக் கங்கர் | மேலை கங்க மன்னனின்]] புதல்வவரும்<ref> Anantavarman Codaganga, a member of that branch of the Ganga dynasty of Mysore who settled in Kalinga (Orissa), Coinage in Ancient India: a numismatic, archaeochemical and metallurgical study of ancient Indian coins, Volume 2 - Satya Prakash, Rajendra Singh - http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, [[கீழைக் கங்கர்]] அரசமரபை தோற்றுவித்தவரும் ஆவார். முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற [[கருணாகரத் தொண்டைமான் | கருணாகரரை]] அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரமச் சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.<ref>''A comprehensive history of India, Volume 4, Part 1'', By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.</ref>
 
==மேலைக்கங்கர் - கீழைக்கங்கர் தொடர்பு ==
 
[[அனந்தவர்மன் சோடகங்கன்]], [[கீழைக் கங்கர்]] பரம்பரையை தோற்றுவித்தவர் என்பதனால், இவரது தந்தை [[ராஜராஜ கங்கேயன்]] என்கிற ராஜராஜதேவ கங்கன், நேரடியாக கங்கபாடியை ஆண்ட [[மேலைக் கங்கர்]] மரபினர் அல்ல. அப்படி கொள்வது ஒரு மாபெரும் வரலாற்று பிழை. [[களப்பிரர்]] காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பிய மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் [[இந்திரவர்மன்]] என்பவர், 5ஆம் நூற்றாண்டின் இறுதியான 498இல் கலிங்கத்தை ஆண்டுவந்த சோம / சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டு / கேசரி மன்னர்களின் கீழ் குறிநில மன்னர்களாக இன்றைய ஸ்ரீகாகுளம் மாவட்டம், விழியநகரம் மாவட்டம் போன்ற கலிங்கத்துக்கு சேர்ந்த ஆந்திரத்தின் பகுதிகளை முக்கலிங்கத்தை தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். பின்னர் 1038ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் [[ஐந்தாம் வஜ்ரஹஸ்தன்]] சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன், கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் திரிக்கலிங்காதிபதி என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் [[ராஜராஜ கங்கேயன்]] என்கிற ராஜராஜதேவ கங்கன் [[இராசேந்திர சோழன் | முதலாம் ராஜேந்திர சோழனின்]] மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, [[ராஜராஜ கங்கேயன்]] இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான [[அனந்தவர்மன் சோடகங்கன்]] 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான [[வீரராஜேந்திர சோழன் | வீரராஜேந்திர சோழனை]] தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் [[வீரராஜேந்திர சோழன் | வீரராஜேந்திர சோழனின்]] மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, [[அனந்தவர்மன் சோடகங்கன் | அனந்தவர்மனை]] தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் [[அனந்தவர்மன் சோடகங்கன் | அனந்தவர்மன் சோழ கங்கன்]] தன் தலைநகரை 1135 இல் [[கட்டாக் | கலிங்கநகருக்கு]] (இன்றைய [[கட்டாக்]]) நகருக்கு மாற்றி, தாங்கள் [[மேலைக் கங்கர் | மேலைக்கங்கர்களாக]] என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் [[கீழைக் கங்கர்]] என்று வழங்குகின்றனர்.
 
==கீழைக்கங்கரும் பழைய கலிங்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது