[[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தின்]] [[திருப்பெதும்புதூர்திருப்பெரும்புதூர்|திருப்பெரும்புதூருக்கு]] அருகேயுள்ள [[தண்டலம்|தண்டலத்தில்]] பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். [[சென்னை கிறித்துவக் கல்லூரி|சென்னை கிருத்தவக் கல்லூரியில்]] பட்டப்படிப்பும், [[மும்பை|பம்பாயில்]] சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 வயதில் மணம் புரிந்தார். 27 வயதில் காங்கிரசில் சேர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தீரர் சத்தியமூர்த்தி இருந்தபோது, இவர் செயலாளராக இருந்தார். பின்னர் தலைவரானார். 1939-1940 இல் தனிதபர் சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது 4 மாதங்களாக சென்னையிலும் அலிப்பூரிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். பேச்சுக்கலை, ரஷ்ய வெளியுறவுக் கொள்கை, இந்திய வெளியுறவுக் கொள்கை, ஆகியவை குறித்து நூல்கள் எழுதியயுள்ளார். [[மாநிலங்களவை]]யில் உறுப்பினராக இருந்தபோது பேசியவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.