அன்னி பெசண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
வரிசை 2:
|name = அன்னி வூட் பெசண்ட்<br />Annie Wood Besant
|image = Annie Besant in 1897.JPG
|caption =
|birth_name =
|birth_date = {{birth date|1847|10|1}}
|birth_place = [[லண்டன்]], {{flag|ஐக்கிய இராச்சியம்}}
|death_date = {{death date and age|1933|9|20|1847|10|1}}
வரிசை 11:
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
வரிசை 17:
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
வரிசை 35:
ஒரு சாதாரண [[ஐரிய மக்கள்|ஐரியக்]] குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை [[ஹரோ]] நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் [[1867]] ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கனவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து [[1873]] இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.
 
[[Fileபடிமம்:Annie Besant - portrait.jpg|thumb|left|150px|[[1880கள்|1880களில்]] அன்னி பெசண்ட்]]
கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.
 
வரிசை 61:
[[1907]] ஆம் ஆண்டில் [[சூரத்]] நகரில் இடம்பெற்ற [[இந்திய காங்கிரஸ்]] மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, [[லக்னோ]]வில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். [[ஹோம் ரூல் இயக்கம்|ஹோம் ரூல்]] (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.
 
அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. [[1917]], [[ஜூன் 15]] ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
 
டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் [[கல்கத்தா]]வில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். [[லாகூர்|லாகூரில்]] [[ஜவகர்லால் நேரு]]வின் தலைமையில் [[1929]] இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் [[சோசலிசம்|சோசலிச]] சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் [[மகாத்மா காந்தி]]யின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் "பொதுநலவாய இந்தியா" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்<ref name="கௌசிகன்">பக். 407, [[வாண்டுமாமா|கௌசிகன்]], ''வரலாறு படைத்த உத்தமர்கள்'', கங்கை புத்தக நிலையம், சென்னை, டிசம்பர் 2003</ref>.
 
== இறுதிக் காலம் ==
தனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான [[ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி]]யுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். [[பிரம்மஞான சபை|பிரும்மஞான சபையின்]] முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில் [[1933]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 20]] இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள் [[ஜே. கிருஷ்ணமூர்த்தி]], [[ஆல்டஸ் ஹக்ஸ்லி]], [[ரோசலின் ராஜகோபால்]] ஆகியோர் இணைந்து [[கலிபோர்னியா]]வில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக [[பெசண்ட் ஹில் பாடசாலை]] எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 74:
{{sisterlinks|Annie_Besant}}
* [http://sify.com/news_info/tamil/pennaenee/april05/fullstory.php?id=13717330 அன்னி பெசண்ட்]
* [http://www.AnandGholapanandgholap.net/ அன்னி பெசண்டின் நூல்கள்]
* [http://www.spartacus.schoolnet.co.uk/Wbesant.htm வாழ்க்கைச் சுருக்கம்]
* [http://www.bbc.co.uk/history/historic_figures/besant_annie.shtml வாழ்க்கைச் சுருக்கம் (பிபிசி)]
வரிசை 87:
[[பகுப்பு:1933 இறப்புகள்]]
[[பகுப்பு:1847 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/அன்னி_பெசண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது