கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 21:
}}
[[படிமம்:Golconda2.JPG|thumb|275px|right|கோல்கொண்டா கோட்டை]]
குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவை கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். வடக்கில் [[முகலாயர்]]களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.
வரி 44 ⟶ 40:
== வரலாறு ==
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், [[ஐதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் [[வைரம்|வைர]] வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது. [[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.
''கோல்லா கொண்டா'' என்கிற [[தெலுங்கு]] பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனை கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது [[ஆட்சி]]யில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் [[கோட்டை]]யை எழுப்பினார்.
வரி 56 ⟶ 48:
பாமினி சுல்தான் ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாக கோல்கொண்டா சிறப்பு பெற்றது. சுமார் 62 ஆண்டுகளில் இந்த களிமண் [[கோட்டை]] முதல் மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் பெரும் கருங்கல் [[கோட்டை]]யாக விரிவாக்கப்பட்டது. சுமார் 5 கிமீ [[சுற்றளவு|சுற்றளவுக்கு]] இக்கோட்டை விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு தலைநகரம் [[ஐதராபாத்]] நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீ தூர சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டன. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாக கோல்கொண்டா அரசு விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு [[பஹ்ரைன்]] குருமார்கள் கோல்கொண்டாவுக்கு<ref>Juan Cole, Sacred Space and Holy War, IB Tauris, 2007 p44</ref> குடிபெயர்ந்தது இதற்கு சான்றாகும்.
1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]] கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
== வைரங்கள் ==
வரி 95 ⟶ 85:
கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் [[தாமரை]]ச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|