ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 147:
செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்]] நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.tnr.com/book/review/orderly-humane-expulsion-germans-richard-evans?page=0,1&utm_source=The%20New%20Republic&utm_campaign=c58b90ef8c-TNR_BA_062812&utm_medium=email|title=Richard J. Evans, "The Other Horror, Review of ''Orderly and Humane: The Expulsion of the Germans After the Second World War'', by R.M. Douglas"|work=New Republic|accessdate=28 September 2014}}</ref> பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் ''[[மேற்கு செருமனி|செருமானியக் கூட்டு மக்களாட்சியாக]]'' (''Bundesrepublik Deutschland'') நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ''[[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|ஜெர்மன் சனநாயகக் குடியரசாக]]''(GDR) (''Deutsche Demokratische Republik'') அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு [[பான்]] தற்காலிகத் தலைநகராயிற்று.<ref>{{cite book | last = Wise | first = Michael Z. | title = Capital dilemma: Germany's search for a new architecture of democracy| year = 1998| publisher = Princeton Architectural Press | isbn =978-1-56898-134-5 | page = 23}}</ref> [[மேற்கு செருமனி|செருமானியக் கூட்டு மக்களாட்சி]]க்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
 
[[File:Thefalloftheberlinwall1989.JPG|thumb|right|1989இல் இடிபடுவதற்கு முன்னதாக [[பிரான்டென்போர்க் வாயில்]] அருகே [[பெர்லின் சுவர்]]. இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.]]
மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) [[கொன்ராடு அடேனார்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு]]டன் இணைந்தது.
 
கிழக்கு செருமனி [[கிழக்கத்திய திரளணி]] நாடாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.<ref name="spiegel_20080311">{{cite web|url = http://www.spiegel.de/international/germany/0,1518,540771,00.html|title = New Study Finds More Stasi Spooks|author = maw/dpa|date = 11 March 2008|work = Spiegel Online&nbsp;– english site (www.spiegel.de/international)|publisher = [[Der Spiegel]]|accessdate =30 October 2011|quote = 189,000 people were informers for the Stasi&nbsp;– the former Communist secret police&nbsp;– when East Germany collapsed in 1989&nbsp;– 15,000 more than previous studies had suggested. [...] about one in 20 members of the former East German Communist party, the SED, was a secret police informant.}}</ref> சோவியத்-பாணி [[திட்டமிட்ட பொருளாதாரம்]] அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.<ref>{{cite news | last = Colchester | first = Nico | url = http://www.ft.com/cms/s/2/504285c4-68b6-11da-bd30-0000779e2340,dwp_uuid=6f876a3c-e19f-11da-bf4c-0000779e2340.html | title = D-mark day dawns | newspaper = [[Financial Times]] | location = London | date = 1 January 2001 | accessdate =19 March 2011 }}</ref>
 
[[File:Thefalloftheberlinwall1989.JPG|thumb|right|1989இல் இடிபடுவதற்கு முன்னதாக [[பிரான்டென்போர்க் வாயில்]] அருகே [[பெர்லின் சுவர்]]. இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.]]
1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு [[பெர்லின் சுவர்]] கட்டப்பட்டது. இது [[பனிப்போர்|பனிப்போரின்]] ஓர் அடையாளமாக விளங்கியது.<ref name="state"/> எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, [[செருமானிய மீளிணைவு]] மற்றும் ''டை வென்டே'' (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் [[செருமானிய மீளிணைவு]] ஏற்பட இது வழிவகுத்தது. <ref name="state"/>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது