மம்மியூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குருவாயூர் கோயில் தகவல்கள்; சேர்க்கப்பட வேண்டிய சிறு குறிப்புகள் குருவாயூர் கோயிலில் உள்ளன |
|||
வரிசை 29:
'''மம்மியூர் கோவில்''' (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு பரமசிவரை வழிபடும் கோவிலாகும். குருவாயூரப்பனை காணவரும் ஒவ்வொரு பக்தனும், போகும் வழியில் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீஹமாகும், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
==குருவாயூர்
வாயுவின் உதவியோடு பிரகஸ்பதி (குரு) உலகம் முழுவது அலைந்து கிருஷ்ணரின் பாதள அஞ்சன விக்ரகத்தை செய்ய மிகவும் புனிதமான மற்றும் பொருத்தமான தலத்தைத் தேடினார். அப்போது பரசுராமரின் வேண்டுகோள்படி [[கேரளா]] வந்தனர் வாயுவும் குருவும். அப்போது ருத்ர தீர்த்தத்தில் நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் அங்கே ஆயிரம் ஆண்டுகளாகத் தாம் தவம் செய்து வருதலையும், தாம் ருத்ர கீதையை உபதேசம் செய்த தலமும் அதுவே என்று கூறி, கிருஷ்ணரின் விக்கிரகத்தை அங்கேயே வைக்கலாம் என்று உறுதி செய்து அருளினார். <ref name="book">குருவாயூர் பூலோகவைகுண்டம்; குருவாயூர் தேவஸ்தான வெளியீடு;2003</ref>
அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே [[குருவாயூர் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு]] வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.<ref name="book"/>
மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம்.
==இடம்==
|