பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தைமாவட்டத்தைச்]] சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான [[திருவரங்கம்|திருவரங்கத்தில்]] பிறந்த பராசரன், [[திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி|திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி]], [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரி]], சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பி.ஏ. படிப்பில் வடமொழிப் பாடத்தில் நீதிபதி சி. வி. குமாரசாமி சாஸ்திரி பதக்கம், சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி. பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றார்.