இறைவழிபாட்டில் சங்குக்கு பெரும்பங்கு உண்டு. <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=101041 சங்கு திருத்தலங்கள், ஆனந்தவிகடன் ]</ref> சங்கின் வாழ்க்கையையும், அதன் பயனையும் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தது போன்று இன்று மிகுதியாக உணரப்படவில்லை. தமிழரின் பண்பாட்டுத்தளத்தில் வழிபாடு, போர்க்களம், வாழ்க்கை முறை,அகவுணர்வுக் கூறு என்ற பல நிலைகளில் சங்கின் பங்களிப்பு அளப்பரியது. கருத்துருவக் குறியீடாகவும், வளமைக் குறியீடாகவும், இன்பக் குறியீடாகவும் உள்ள சங்கு உலகின் பரந்த பரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, சப்பான், ஆசுதிரேலியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு இல்லத்திலும் தமிழ்நாட்டுச் சங்கு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.