திருவிதாங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 34:
== வரலாறு ==
சேரநாட்டின் தென்பகுதியில் [[ஆய்நாடு]], வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு [[பொதியமலை]] சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் [[திருவல்லா]] வரை பரவியிருந்தது.<ref> பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு</ref>. இப்படியாக வேணாடு, தற்போதைய [[இந்தியா]]வில் தமிழ் நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தையும்]], [[கேரளா|கேரள]] மாநிலத்தின் [[கொல்லம் மாவட்டம்|கொல்லம்]], [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம்]] ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் [[திருவிதாங்கோடு|திருவிதாங்கோடும்]] பின்பு [[கல்குளம்|கல்குளமும்]] வேணாட்டின் தலைநகராக இருந்தன.
சேர மன்னன் [[சேரமான் பெருமாள்]] காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்<ref> பக். 3, A history of Malayalam Language and Literature, கிருட்டிண சைன்யா</ref>. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் [[அகதி|அகதிகளாக]] வந்து தங்கியிருந்த [[யூதர்கள்|யூதர்களுக்கு]] குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்<ref> பக். 6, A History of Kerala</ref>.
வரிசை 46:
வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். இவர் அரசனின் சகோதரி மகன். [[திற்பாப்பூர் பரம்பரை]]யில் வந்தவர். இவர் [[மருமக்கள் வழி]] வந்தவர் என்ற கூற்றுமுள்ளது.
வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் [[வணிகம்|வணிகக்]] குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் [[ஆங்கிலேயர்]], [[போர்த்துக்கீசர்|போர்ச்சிகீசியர்]], டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்<ref> கே.கே. குசும்பன், History of Trade and commerce in Travancore</ref>. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் [[குளச்சல் சண்டை|குளச்சல் சண்டையில்]] தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்<ref> R.G. Alexander, Monumental remanis of Dutch East India</ref>. கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் [[மரணம்]] அடைந்தார்.
|