சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 17:
}}
 
'''சித்ரா''' அல்லது '''கே. எஸ். சித்ரா''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா''' (''Krishnan Nair Shantakumari Chithra'', பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளம்]], [[கன்னடம்]], [[தமிழகத் திரைப்படத்துறை|Tதமிழ்தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[ஒடியா மொழி|ஒரியா]], [[பாலிவுட்|இந்தி]], [[அசாமிய மொழி|அசாமிய]], [[வங்காள மொழி|வங்காளம்]] போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]]யும், ஆறு தடவைகள் தென்னிந்திய [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]] விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="herself">{{cite web|url=http://www.hindu.com/2005/07/21/stories/2005072113740200.htm|title=One more feather in her cap |author=S.R. Ashok Kumar |publisher=''[[The Hindu]]''|date=21 July 2005}}</ref> இவர் தென்னிந்தியர்களிடையே ''சின்னக்குயில் சித்ரா'' எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.<ref name="night">{{cite news|last=Nair|first=Sulekha|title=Nightingale of the south |url=http://www.expressindia.com/fe/daily/20010123/fsm21016.html|accessdate=11 டிசம்பர் 2010|newspaper=Express India|date=23 சனவரி 2001}}</ref>
 
==குடும்பம்==
இவர் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார். [[வானொலி]]யில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே [[அகில இந்திய வானொலி]] ஒரூ பரப்பியஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
 
== இசைப் பயிற்சி ==
பள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொக்கைக்குஉதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்தில்பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
 
இவர் பேராசிரியர். ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் அவர்கள் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி அவர்கள், சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.
 
== திரைப்பட அறிமுகம் ==
தனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, [[கே. ஜே. யேசுதாஸ்]] அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாஸ் அவர்களுடன்யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
 
== சென்னை வருகை ==
வரிசை 37:
1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('[[கீதாஞ்சலி (திரைப்படம்)|கீதாஞ்சலி]] ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட '[[சின்னக்குயில்]] சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]]யில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.
 
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய திரு.[[கங்கை அமரன்]], மெல்லிசை மன்னர் [[விஸ்வநாதன்]], ஷங்கர்சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
 
== மற்ற இசையமைப்பாளர்கள் ==
எண்பதுகளின் பிற்பகுதியில் திரு.சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் திருமதி.சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
 
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் திரு எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் [[குன்னக்குடி வைத்யநாதனின்]] 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், [[டி.ராஜேந்திரனின்]] இசையில் சில பாடல்களையும் பாடினார்.
 
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , [[பாக்கியராஜ்]] (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), [[எஸ். ஏ. ராஜ்குமார்]] (ஆயிரம் திருநாள்) , [[தேவா]] (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
வரிசை 68:
 
== விருதுகள் ==
திருமதி.சித்ரா பல விருதுகளைப் பெற்றுள்ளார். [[தமிழ் நாடு]], கர்நாடகா, [[கேரளா]], ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை ([[எஸ். ஜானகி]] அவர்கள் 12 முறை) கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில [[நந்தி விருது]]களையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு [[கலைமாமணி]] விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி, தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
 
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா, எஸ். பி. சரண், [[விஜய் யேசுதாஸ்]] முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
 
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் திரு.[[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]] அவர்களிடமிருந்து '[[பத்ம ஸ்ரீ]]' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
 
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறுகிறார்.
 
== தாய் ==
வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும்எனும் மழலைக்குபெண் தாயாகியபிறந்தார். சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்.14 ஏப்ரல் 2011அன்று2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது