நுளம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''நுளம்பர்''' என்னும் மரபினர் கிபி எட்டாம் நூற்றாண்டுக்கும் 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் [[தென்னிந்தியா]]வில் நுளம்பபாடி என்னும் பகுதியை ஆட்சி செய்த [[குறுநில மன்னர்]]கள் ஆவர். தொடக்கத்தில் நுளம்பபாடி இன்றைய [[ஆந்திரா]], [[கர்நாடகா]] ஆகிய மாநிலங்களுக்குள் அடங்கியிருந்தது. பிற்காலத்தில் இது தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவடைந்தது. தொடக்ககால நுளம்பபாடி, ''நுளம்பபாடி 1000'' என அழைக்கப்பட்டது. விரிவடைந்த பின்னர் இது ''நுளம்பபாடி 32000'' எனப்பட்டது. விரிவடைந்த நுளம்பபாடியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனத்பூர் பகுதி, கர்நாடக மாநிலத்தில் அடங்கும் [[சித்திரதுர்க்கா]], [[தும்கூர்]], [[பெல்லாரி]], [[பெங்களூர்]], [[கோலார்]] ஆகிய பகுதிகளும், தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் அடங்கும் [[தர்மபுரி]], [[கிருட்டிணகிரி]], [[வட ஆற்காடு]] மாவட்டப் பகுதிகளும் அடங்கியிருந்தன.
 
நுளம்ப மரபினர், [[மேற்குக் கங்கர்|கங்கர்]]களுக்கும், [[இராஷ்டிரகூடர்|ராட்டிரகூடர்]]களுக்கும் அடங்கியே ஆட்சிசெய்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் தங்களைப் [[பல்லவர்]]களின் வழியைச் சேர்ந்தவர்களாகக் கூறுகின்றனர். [[ஏமாவதித்தூண் கல்வெட்டு]] மூலம் இவர்களுடைய மரபு பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளன.<ref>Epigraphia Camatica,Vol.XII,C.24,28,35,36.</ref> இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களாக,
# திரிநயன பல்லவன்
# மங்கள நுளம்பாதிராசன்,
வரிசை 13:
# திலிப்பரசன்
ஆகியோரின் பெயர்கள் கிடைக்கின்றன.
 
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு: தென்னிந்தியக் குறுநில மன்னர்]]
"https://ta.wikipedia.org/wiki/நுளம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது