குதுப் நினைவுச்சின்னங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி தவறான விக்கியிணைப்புகள் நீக்கம்.
வரிசை 40:
== வரலாறு ==
[[படிமம்:Delhi Qutab.jpg|thumb|72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப் மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி]]
[[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் காணப்படும் [[ஜாம் மினார்]] எனும் கட்டிடத்தை விட உயரமாகவும் பெயர் பெற்றிடும் நோக்கத்துடன் தில்லியின் முதல் இஸ்லாமிய அரசரான [[துக்ளக்|குத்துபுத்தின் ஐபக்]], 1193 ஆம் ஆண்டு குதுப் மினார் என்ற இந்த கோபுரத்தின் கட்டிட வேலைகளை ஆரம்பித்தார். ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அவரை பின்தொடர்ந்த, [[துக்ளக்|இல்த்துத்மிசு]] என்ற அரசர் மேலும் மூன்று தளங்களைக் கட்டி முடித்தார். 1286 ஆம் ஆண்டில், [[துக்ளக்|அல்லாவுத்தின்]] என்ற அரசரின் கீழ் ஐந்தாவது மற்றும் கடைசி தளம் கட்டி முடிந்தது. ஐபக் முதல் துக்ளக் வரையான காலகட்டத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்களை அந்த தூபியில் தெளிவாகக் காணலாம். [[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் இதற்கு முன் கஜனி மற்றும் கோரி வம்சத்தினர் கட்டிய கோபுரங்களைப் போல, இந்த குதுப் மினாரும் பல ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய பட்டையான விளிம்புடன் கூடிய [[உருளை வடிவு|உருளை வடிவான]] அம்புகள் கொண்டு வடிவமைக்கப் பெற்றது. மேலும் தனிப்பட்ட முகாமா வகை தண்டயங்களைக் கொண்டு உப்பரிகைகள் உருவாக்கப்பெற்றன. இந்த தூபி சிவந்த வரை [[மணற்கல்]]லால் கட்டியது மேலும் அதன் மேல் [[குர் ஆன்|குர்ஆனில்]] இருந்து கவிதைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் செதுக்கப் பெற்றது. [[தில்லி]] நகரத்தை தலைநகரமாகக் கொண்டு கடைசியாக ஆண்ட [[இந்து]]க்கள் வம்சத்தை சார்ந்த தொமர்கள் மற்றும் சௌஹன்கள் வாழ்ந்து அழிந்த [[செங்கோட்டை]] என்ற இடத்தின் இடிபாடுகளில் தான் இந்த குதுப் மினார் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அதற்கு முன் 27 மிகப் புராதனமான இந்து மற்றும் ஜைன மதத்தினரின் கோவில்கள் நிலை கொண்டிருந்தன, அவற்றை அழித்து அதில் எஞ்சிய பொருட்களைக் கொண்டு இந்த குதுப் மினார் நிறுவப்பெற்றது.<ref name="Google Books" /> குதுப் மினாரில் உள்ள ஒரு செதுக்கு கலைத்திறன் வேலைப்பாட்டில் "ஸ்ரீ விஸ்வகர்மா பிரசாதே ரக்ஷித" என்ற வாசகம் உள்ளது; அதன் மூலமாக ''விஸ்வகர்மாவின் இறையாசி '' பெற வேண்டும் என்பதற்காக ஓர் அடிமை இந்து கைவினைஞர் கட்டிடப்பணியில் இருந்த வேளையில் இதை செதுக்கி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.<ref name="iloveindia.com">http://www.iloveindia.com/indian-monuments/qutub-minar.html</ref>
 
இந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லி சுல்தான்கள் காலத்தில் விஸ்தரிக்கப்பட்ட [[மசூதி]] குவ்வட்-உல்-இஸ்லாம் போல, மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயில் தூபி தனது பங்கை வழக்கமாக செய்ய வேண்டி கட்டி இருக்கலாம். வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது [[இஸ்லாம்]] மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் [[துக்ளக்|குத்துபுத்தின் ஐபக்]] அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியாதாகக் கூறினாலும்,<ref name="iloveindia.com"/> சிலர் ட்ரான்ஸ்ஓக்சியானா என்ற இடத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி குத்துபுத்தின் பக்தியார் காக்கி<ref>[http://www.hinduonnet.com/mp/2004/09/06/stories/2004090600510202.htm பக்கிர்கள் செல்வாக்கு பெற்ற போது]. தி ஹிந்து ; செப் 06, 2004; மெட்ரோ பதிப்பு. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகஸ்ட் 2008.</ref> என்பவரை போற்றும் வகையில் சூட்டப் பெற்றதாக கூறுகிறார்கள், இல்துமிஷ் என்ற அரசரும் அவரை மிகவும் போற்றி வணங்கியதாக கூறுகிறார்கள்.
 
இந்த [[துக்ளக்|குதுப் வளாகத்தின்]] அருகாமையில் நிற்கும் [[துக்ளக்தில்லி இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்ன என்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால் இப்படி செய்யாமல் இருக்க ,இந்திய அரசு இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது.
 
இருமுறைக்கும் மேலாக நிகழ்ந்த நிலநடுக்கங்களால் மினார் கொஞ்சம் சீரழிந்தது, ஆனாலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதை புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தனர். பிரோஜ் ஷா அரசனாக இருந்த பொழுது, இதன் இரு மேல் மாடிகள் பூமி குலுக்கம் காரணம் பழுதடைந்தன, ஆனால் அரசர் பிரோஜ் ஷா அதை அப்போதே சரிகட்டிவிட்டார். 1505 ஆம் ஆண்டில், நிலநடுக்கம் மீண்டும் தாக்கியது மற்றும் சிகந்தர் லோடி அதை மீண்டும் பழுது பார்த்தார். பிறகு 1794 ஆம் ஆண்டில் ஒரு முறை பூமி குலுக்கத்திற்கு இந்த கோபுரம் ஆளான பொழுது, மேஜர் ஸ்மித் என்ற பொறியியலாளர் அதன் பழுதடைந்த பாகங்களைச் சரி செய்தார். அவர் கோபுரத்தின் சிகரத்தில் பிரோஜ் ஷா அமைத்த காட்சிக்கூடத்தை மாற்றி அமைத்தார். இந்தக் காட்சிக் கூடத்தை 1848 ஆம் ஆண்டில் லோர்ட் ஹார்டிஞ் என்பவர் பிரித்தெடுத்து, தபால் கட்டிடம் மற்றும் கோபுரத்திற்கு இடையில் அமைந்த தோட்டத்தில் மாற்றியமைத்தார். பிரோஜ் ஷா அமைத்த தளங்களை எளிதாக கண்டு கொள்ளலாம், ஏன் என்றால் அவர் தரைகளை வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் உருவாக்கினார், அவை மினுமினுப்பாகவும் வழவழப்பாகவும் இருப்பது பார்த்தாலே தெரிந்து விடும்.
"https://ta.wikipedia.org/wiki/குதுப்_நினைவுச்சின்னங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது