முதலாம் பிருதிவிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''முதலாம் பிருதிவிபதி''' என்பவன் [[மேலைக் கங்கர்|கங்க]] மன்னர்களில் ஒருவனாவான். இவன் கி.பி.880 இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் நடந்த போரில் இறந்தான்
==அரசுரிமைப் போர்கள்==
ஒனபதாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கங்கர்கள் மிகவும் வலுவிழந்திருந்நதர். அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிளவுள் இதனை மிகுதிப்படுத்தி இருந்தன. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி அவர்களை இரு மரபுகளாக்கியது. இப்பகுதி சிற்றரசர்களையும் இரு பிரிவுகளாக்கி இருந்தது. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவனே முதலாம் பிருதிவிபதி இவனை [[பாணர் (சிற்றரசர்)|பாணரும்]], வைடும்பரும் ஆதரித்தனர். இன்னொருவன் [[முதலாம் இராச மல்லன்இராசமல்லன்]] இவனை [[நுளம்பர்|நுளம்பரும்]],தெலுங்குச் சோடரும் ஆதரித்தனர். இவர்களைக்குள் நடந்த உட்பகைப் போர்கள் பல இப்போரில் இறுதியில் (கி.பி.878) வென்றவர்கள் பிருதிவிபதியுத் அவன்தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்துவிடவில்லை.
==திருப்புறம்பியம் போர்==
இவ்வூர் குடந்தைக்கு அருகில் உள்ளது இங்கு கி.பி.880இல் நடந்த போர் தென்னாடு வரலாற்றில் பெரு முக்கியத்துவம்வாய்ந்த போராகும். சோழப் பேரரசு வளர்வதற்கு வித்திட்டப் போர். இப்போரின்போது பல்லவ பேரரசனாயிருந்தவன் [[நிருபதுங்கவர்மன்]] அவனுடன் அவன் மகன் [[அபராஜித்தன்]] ஆட்சியில் பங்குகொண்டிருத்மான். பல்லவருக்கு ஆதரவாக முதலாம் பிருத்துவிபதியும், சோழன் ஆதித்தனும் பல்லவர் பக்கம் நின்று [[பாண்டியன் [[வரகுணன்|வரகுணனை]] எதிர்த்து போரிட்டனர். பிருதிவிபதி பாண்டியர் படைகளை சூரையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, 'தன் உயிர் விட்டும் அபராஜிதனை (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பெயர்) அபராஜிதனாகவே ஆக்கிவிட்டான்'' என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளதாக தெரியவருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பிருதிவிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது