முதலாம் பிருதிவிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
ஒனபதாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கங்கர்கள் மிகவும் வலுவிழந்திருந்நதர். அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிளவுள் இதனை மிகுதிப்படுத்தி இருந்தன. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி அவர்களை இரு மரபுகளாக்கியது. இப்பகுதி சிற்றரசர்களையும் இரு பிரிவுகளாக்கி இருந்தது. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவனே முதலாம் பிருதிவிபதி இவனை [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணரும்]], வைடும்பரும் ஆதரித்தனர். இன்னொருவன் [[முதலாம் இராசமல்லன்]] இவனை [[நுளம்பர்|நுளம்பரும்]],தெலுங்குச் சோடரும் ஆதரித்தனர். இவர்களைக்குள் நடந்த உட்பகைப் போர்கள் பல இப்போரில் இறுதியில் (கி.பி.878) வென்றவர்கள் பிருதிவிபதியும் அவன்தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்துவிடவில்லை.
==திருப்புறம்பியம் போர்==
இவ்வூர் குடந்தைக்கு அருகில் உள்ளது இங்கு கி.பி.880இல் நடந்த போர் தென்னாட்டு வரலாற்றில் பெரு முக்கியத்துவம்வாய்ந்த போராகும். சோழப் பேரரசு வளர்வதற்கு வித்திட்டப் போர். இப்போரின்போது பல்லவ பேரரசனாயிருந்தவன் [[நிருபதுங்கவர்மன்]] அவனுடன் அவன் மகன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராஜித்தன்]] ஆட்சியில் பங்குகொண்டிருந்தான். பல்லவருக்கு ஆதரவாக முதலாம் பிருதிவிபதியும், சோழன் [[ஆதித்தன்ஆதித்த சோழன்|ஆதித்தனும்]] பல்லவர் பக்கம் நின்று பாண்டியன் [[வரகுணன்|வரகுணனை]] எதிர்த்து போரிட்டனர். பிருதிவிபதி பாண்டியர் படைகளை சூரையாடினான். இதைக்கண்ட பாண்டியன் சீற்றம்கொண்டு அவன்மீது பாய்ந்து அவனைக் கொன்று வீழ்த்தினான். ஆனால் மாள்வதற்குள் தன் வீரத்தால் பல்லவர் பக்கத்திற்கே வெற்றியளித்துவிட்டான். கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு இச்செயலைப் பாராட்டி, 'தன் உயிர் விட்டும் [[அபராசித வர்ம பல்லவன்|அபராஜிதனை]] (வெல்ல இயலாதவன் என்பது அப்பெயரின் பொருள்) அபராஜிதனாகவே ஆக்கிவிட்டான்'' என்று குறிக்கிறது. திருப்புறம்பியத்தில் இன்றும் முதலாம் பிருதிவிபதியை அடக்கம்செய்து நிறுவப்பட்ட பள்ளிப்படைக் கோயில் உள்ளதாக தெரியவருகிறது.
திருப்புறம்பியம் போரில் முதலாம் பிருதிவிபதி இறந்ததினால் இராசமல்லன் மரபு மீண்டும் வலுவுறத்தொடங்கியது.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பிருதிவிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது