அ. சீனிவாச ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''அ. சீ. ரா''' என்றழைக்கப்பட்ட '''பேராசிரியர் . அ.சீநிவாசராகவன்
==வாழ்க்கைச் சுருக்கம்==
சீநிவாசராகவன் [[தஞ்சை மாவட்டத்தில் உள்ள கண்டியூரில் பிறந்தார்.அவரது தந்தை அண்ணாதுரை ஐயங்கார். தாயார் இரங்கநாயகி அம்மாள்.அவருக்கு ஒரே ஒரு சகோதரர், சகோதரிகள் இருவர். அவரது மனைவியின் பெயர்: இராஜம் அம்மையார்.
கல்வி
தனது பள்ளிப் படிப்பை [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலும்]], கல்லூரிப் படிப்பை [[திருச்சி]] புனித ஜோசப் கல்லூரியிலும் முடித்தார்.
பணி
*அவன் அமரன்▼
*உதய கன்னி (நாடகம்)▼
*இலக்கிய மலர்கள்▼
*காவிய அரங்கில்▼
*குருதேவரின் குரல்▼
*புது மெருகு▼
*நம்மாழ்வார்▼
சிறிது காலம் அதே கல்லூரியிலும் பின்னர் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியிலும் அதன்பிறகு நெல்லை இந்துக்கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். [[சென்னை]] விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலத்துறைத்தலைவராகப் பணியாற்றினார். பிறகு 1951 தொடங்கித் தூத்துக்குடி வ.உ .சி கல்லூரியின் முதல்வராக 1969 வரை பணியாற்றினார்.
பத்திரிகை ஆசிரியர்
மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947முதல் 1949 வரை நடத்தினார். அப்பொழுது கவர்னர் ஜெனெரலாக இருந்த இராஜாஜி. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பிஸ்ரீ, கே ஏ நீலகண்ட சாஸ்த்திரி,ந.பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன், பெ.ந.அப்புசாமி எனப்பல பெரிய அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். அதில் பேராசிரியர் பல இலக்கியத் திறனாய்வுகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அதே சமயம் திரிவேணி என்னும் ஆங்கிலப்பத்திரிகைக்கு உதவியாசிரியாகவும் இருந்தார்.
இலக்கியப்பணி
கம்பனிலும் பாரதியிலும் தோய்ந்த பேராசிரியர் மிகச்சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். காரைக்குடியில் நடைபெறும் கம்பன் விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கலந்து ”கொள்ளாத ஆண்டே இல்லை. பேராசியர் பட்டிமண்டபச் சொற்பொழிவாளராகவும் நடுவராகவும் கவியரங்கத் தலைவராகவும் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றும் நினைவு கூரப்படுகின்றன. கல்கத்தா பம்பாய் , டெல்லி என இந்தியா முழுவதும் அவர் பல இலக்கியச் சங்கங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். அவருக்கிருந்த ஒரு அலாதியான வெங்கலக்குரல் அவரது சொற்பொழிவுகளுக்கு மெருகூட்டியது. பலவருடங்கள் வானொலியில் மார்கழி மாதம் 30 நாளும் அவர் ஆற்றிய திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. தமிழில் வானொலி நாடகங்களுக்கு வித்திட்டவர்களில் பேராசிரியர் முக்கியமானவர். அவருடைய பல வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அவர் உமர்கய்யாம் பாடல்கள், காளிதாசனின் மேக சந்தேசம், ஆதிசங்கரரின் மநீஷா பஞ்சகம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கம்பனின் பல பாடல்களை Leaves from kamban" பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதியின் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் இவர் இராஜாஜி போன்ற அறிஞர்கள் மொழியாக்கம் செய்த பாரதி பாடல்களையும் தொகுத்துக் கல்கத்தா தமிழ்ச்சங்கம் சார்பாக ” voice of a poet" என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார். நாணல் என்னும் புணைபெயரில் இவர் எழுதிய வெள்ளைப்பறவை என்னும் கவிதை நூலுக்கு 1968ல் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. தமிழ்க் கவிதைக்கு அளிக்கப்பட்ட முதல் சாகித்ய அகாதமி பரிசு அதுதான்.
கல்கி, அமுதசுரபி கலைமகள் போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதியிருக்கிறார். கல்கி பத்திரிகையில் அவர் எழுதிய இலக்கியச் செல்வம் என்னும் தொடர், குருதேவரின் குரல் என்னும் தொடர் இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றன. மாகாகவி தாகூரின் பாடல்களை மேக்மில்லன் நிறுவனத்திற்காகக் கவியரசர் கண்ட கவிதை என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாருதத்தின் ஆங்கிலக் கவிதைகள், வால்ட் விமனின் லீவ்ஸ் ஆஃப் கிராஸ் என்னும் புத்தகத்திலிருந்து சில கவிதைகள், டென்னிஸன், ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், இராபர்ட் பிரௌனிங் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்
1954ம் ஆண்டு டெல்லியில் நடந்த அகில இந்திய மொழிகள் மாநாட்டில் அவர் தமிழின் சார்பாகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். பண்டிட் ஜவகர்லால் நேரு தலைமை. அப்பொழுது கடைசியாக இவருக்கு 2 நிமிடங்கள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது. இவர் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர் “பாடலுக்கு விளக்கம் கொடுக்க முற்பட்ட போது கூட்டத்தினர் இந்தியில் பேசச்சொல்லிக் கூச்சலிட்டனர். உடனே நேரு எழுந்து “என்ன அருமையாக ஆங்கிலம் பேசுகிறார். சத்தம் போடாமல் இருங்கள்” என்று சொன்னதும் கூச்சல் அடங்கியது. உடனே பேராசிரியர்” paNditji, This attitude of these people make we southerners feel unhappy" என்றார். உடனே நேருஜி தனது அடுத்த நிகழ்ச்சியை இரத்துசெய்துவிட்டு பேராசிரியரைப்பார்த்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள்” என்றாராம்.
ஆன்மிகச் சொற்பொழிவாளர்
கம்ப இராமாயணம், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவாசகம் ஆகியவற்றில் தொடர் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
கல்கி நினைவுச் சொற்பொழிவு.
சென்னைப்பல்கலைக்கழக்கத்தில் நினைவுச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில்தான் நிகழ்த்த வேண்டும் என்னும் நிலையை மாற்றி முதன் முதல் கல்கி நினைவுச்சொற்பொழிவை” ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.
இவர் எழுதியுள்ள நூல்கள்
மேல்காற்று
ஒரு நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை
வெள்ளைப்பறவை
மனப்பேய்(நாடகம்)
கவியரசர் கண்ட கவிதை
தாருதத் பாடல்கள்(மொழியாக்கம்)
எல்லையிலே(நாடகம்)
விஸ்வரூபம்
இவரது நூற்றாண்டு விழாச் சமயத்தில் இவரது எழுத்துகள் அனைத்தும் அ/சீ.ரா எழுத்துகள் என்னும் தலைப்பில் ஏழு தொகுதிகளாக அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது
இவர் 1974ம் வருட இறுதியில் சாகித்ய அகாதமிக்காக நம்மாழ்வார் பற்றி ஒரு நூல் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் நம்மாழ்வாரின் பாசுரங்கள் பல ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நம்மாழ்வாரை எழுதிய கை இனி வேறு எதையும் எழுதாது என்றார். அவர் சொன்னாற்போலவே வேறு எதுவும் எழுதாமல் 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் அமரரானார்.
ஆதார நூல் - பேராசிரியரின் மாணவர் கவிமாமணி இலந்தை சு இராமசாமி எழுதி சுந்தர் பதிப்பகம் வெளியிட்டுள்ள” இலக்கியச்சீனி அ.சீ. ரா - வாழ்வும் வாக்கும்
|