ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" படிமம்:Kannaki in Pandian Court.jpg|right|thumb|30..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 1:
[[படிமம்:Kannaki in Pandian Court.jpg|right|thumb|300px|[[கோவலன்]] கொல்லப்பட்டமைக்கு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு வழக்காடும் [[கண்ணகி]]]]
'''நெடுஞ்செழியன் I''' அல்லது '''முதலாம் நெடுஞ்செழியன்''' (Nedunj Cheliyan I) [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகார காவியத்தில்]] கூறப்படும் [[மதுரை|மதுரையை]] ஆண்ட பாண்டிய மன்னன். இவரது பட்டத்து ராணியின் பெயர் [[கோப்பெருந்தேவி]]. [[கடைச்சங்கம்|கடைச்சங்க கால]] பாண்டிய மன்னர்களில் ஒருவர். சரியாக ஆராய்ந்து அறியாது ஒரு உயிரைக் கொல்ல ஆணையிட்டு, நீதி தவறியமைக்காக தன்னுயிர் நீத்த பாண்டிய மன்னன்.
==வரலாறு==
[[கோவலன்]] தனது மனைவி [[கண்ணகி|கண்ணகியுடன்]] மதுரை நகரத்திற்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்புகளில் ஒன்றை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் பாண்டிய அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி அரசவைக்குக் கூட்டிச்சென்றனர். அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான முதலாம் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
இதையறிந்த [[கண்ணகி]] அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். தான் தவறாகத் தீர்ப்பளித்ததை உணர்ந்து வேதனையடைந்த பாண்டிய அரசன், நீதி தவறிய நானே கள்வன் என்று கூறிக்கொண்டே அரசவையிலேயே உயிர் துறந்தான். இதனை கண்ட அரசி கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தாள்.
எனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் [[மதுரை|மதுரை மாநகரையே]] எரித்ததாகச் [[சிலப்பதிகாரம்]] கூறுகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04114l1.htm சிலப்பதிகாரம்]</ref>
<ref>[http://www.tamilvu.org/library/l3100/html/l3100ind.htm 10. வழக்குரை காதை]</ref>
<ref>[http://www.tamilkalanjiyam.com/literatures/aimperum_kaappiyangal/silappadhikaram.html#.VN4hTeaUdVQ சிலப்பதிகாரம்]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
==இதனையும் காண்க==
*[[சிலப்பதிகாரம்]]
[[பகுப்பு:கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:சிலப்பதிகாரம்]]
[[பகுப்பு:பாண்டியர்]]
[[பகுப்பு:சங்ககாலப் பாண்டியர்]]
[[பகுப்பு:தொன்மவியல் பாண்டியர்கள்]]
▲[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
|