இரண்டாம் பரமேஸ்வரவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:05, 6 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (இறப்பு 731 ) என்பவன் பல்லவ மரபின் ஒரு மன்னனாவான்.இவன் சாளுக்கிய அரசனான இரண்டாம் விக்ரமாதித்னால் கொல்லப்பட்டான் இவன் கி.பி.728 இருந்து 731. வரை ஆட்சிசெய்தான்.

ஆட்சி

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் தனது தந்தை இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு 728இல் ஆட்சிக்குவந்து 731. வரை ஆட்சியில் இருந்தான். இவனது ஆட்சியின்போது காஞ்சிமீது சாளுக்கிய படைகள் படையெடுத்தன. பரமேஸ்வரவர்மன் போரில் தோற்று சாளுக்கியரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டான். இந்த இழிவுக்கு பழிவாங்க பரமேஸ்வரவர்மன் படைகளைத்திரட்டி சாளுக்கிய நாட்டைத் தாக்கினான். ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவை கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. 731இல் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவர்கள் வாரீசு இல்லாமல் போயினர்.