கி. பி. அரவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கி. பி. அரவிந்தன்''' (1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். [[நெடுந்தீவு|நெடுந்தீவை]]ப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு [[மட்டக்களப்பு|மட்டக்களப்பிலும்]] முடித்தார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.
 
1972 ஆம் ஆண்டில் [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|1972 அரசமைப்புச் சட்டம்]] தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறினார். 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
==மறைவு==
கி. பி. அரவிந்தன் [[புற்றுநோய்|புற்றுநோயால்]] பாதிக்கப்பட்டு [[பாரிஸ்|பாரிசில்]] உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார்.<ref name=TN>[http://tamilnet.com/art.html?catid=13&artid=37681 Ki Pi Aravinthan passes away in Paris], தமிழ்நெட், 8 மார்ச் 2015</ref> 1990 இல் இவருக்குத் திருமணமாகி மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கி._பி._அரவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது