வாழை இலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addind cat இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள் using AWB |
வாழை இலை உணவு |
||
வரிசை 1:
சுட சுட வெள்ளை சோறு வடிச்சு ஆவி பறக்க இளம் பச்சை வாழை இலையுல போடும்போது அந்த சோறும் வாழை இலையும் சேர்ந்து ஒரு மனம் வரும் பாருங்க...தொண்ட வரைக்கும் திண்ணவன் கூட இன்னும் ஒரு பிடியேனும் சாப்பிடுவான்...அதே சோற்ற தைத்த இலை (“காய்ந்த ஆல மர இலை” அல்லது “மந்தாரை இலை”) இல்லை பனம் இலை அதுல போட்டு திண்ணும்போது அது ஒரு தனி ருசி...மனம்..அட டா..சுடு சோற்றுல மிளகு தக்காளி ரசம் போட்டு வாழை இலையோட சேத்து சுரண்டி வழிச்சு சாப்பிடும் ருசி ...”மந்தாரை இலை” இலையுல புளியோதரை வச்சு அத முன்னிரவே நூல் போட்டு கட்டி வச்சு மறு நாள் மதிய உணவுக்கு சாப்பிட்டு பாருங்க..மதிய உணவுக்கு வீட்டுல இருந்து தக்காளி சாப்பாட்ட வாழை இலையுல கட்டி கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...அடடா...அந்த ருசி...வேற எந்த உணவுலங்க கிடைக்கும்...கொஞ்சம் சொல்லுங்களேன்?!.
பொதுவா எந்த உணவையும் பச்சை இலையில் இட்டு சாப்பிடுவது அவ்வளவு நல்லது...ருசியும் மருந்தும் ஒன்னா கிடைச்சா திண்ண வலிக்குமா என்ன? அதவிட வாழை..ஆலம்..மந்தாரை இலை இந்த மூணு இலைகளுமே நிறைய மருத்துவ குணம் கொண்டது. நரம்பு தொடர்புடைய வியாதிகளுக்கும் பக்கவாதம் வியாதிகளுக்கும்..வயிற்றுப்புன் தோல் வியாதி இன்னும் பல வியாதிகளுக்கும் இந்த இலைகள் மருந்தாகவே இருக்கு. கோவில் பிரசாதம் எல்லாம் இலைகள்ல பரிமாறுவதற்கும் இதான் முக்கிய காரணம்...
இந்த இலைகள் எல்லாம் பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்ல வீட்டுல அக்கம் பக்கம் சாதரணம விலையர்துதான்..நகரத்துல இருக்குறவங்க இந்த இலைகளை வாங்கறது ஒன்னும் அவளோ கடினம் இல்லை விலை மிகுதியும் இல்ல...தண்ணி செலவு சோப்பு செலவு தட்டு அடுக்கி வைக்க இடம் இந்த செலவெல்லாம் விட இலை செலவு குறைவுதான்...இலையுல சாப்பிட்டா
- பாத்திரம் கழுவுற தண்ணி மிச்சம்
- பாத்திரம் கழுவுற சோப்பு செலவு மிச்சம்
- கொஞ்சம் தண்ணி தெளிச்சு தொடச்சாலே சுத்தம் ஆகிடும்
- உணவு ருசியா இருக்கும் தனி மனமா இருக்கும்..சாப்பிடவே உணர்வுபூர்வமா திருப்தியா இருக்கும்.
- சாப்பிட்ட பிறகும் அந்த இலைகள ஆடு மாடு தின்னும் அதுங்களுக்கும் பேப்பர் விட இலைகள் தான் விருப்பம்
- இலைகளின் குப்பைகள் பூமிக்கும் அருமையான உரமே
- எல்லாத்துக்கும் மேல இலை வாங்கி அதுல சாப்டீங்கன்னா வாழை மற்றும் மற்ற இலை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நன்மை (இப்படியாவது விவசாயிகள வாழ வைப்போமே?)
முடுஞ்ச வர அலுவலங்களுக்கோ பள்ளி கல்லூரிக்கோ மதிய உணவ இலைல மடிச்சு கொண்டு போயி சாப்பிட்டு பாருங்க...பிள்ளைங்களுக்கும் கட்டி கொடுங்க...
இவ்வளவு அருமையான இலை சாப்பாட்ட விட்டுட்டு....இன்னைக்கு அதிகப்படி யாரும் இலைல சாப்பிடறதும் இல்ல கல்யாணத்துல கூட விருந்தாளிக்கு பரிமாறுவதும் இல்ல...கம்ப்யூட்டர் இலை னு பேப்பர் ல இலை போலவே செஞ்சு பேப்பரை தின்றோம். என்ன அறிவு?
- யாதுமாகி -
|