தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
[[படிமம்:Humayun's Tomb Delhi .jpg|thumb|left|1560ல் கட்டப்பட்ட [[ஹுமாயூன் கல்லறை]]யே முகலாயக் கல்லறைத் தொகுதிக்கான முதல் எடுத்துக்காட்டு.]]
[[படிமம்:Red Fort Delhi.jpg|thumb|left|1639ல் சாஜகானால் கட்டப்பட்ட [[செங்கோட்டை]]. இதிலிருந்தே இந்தியப் பிரதமர் விடுதலை நாள் உரை நிகழ்த்துகிறார்.]]
இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது [[ஆயிரவாண்டு]]களிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டவர்]]களின் தலைநகரமான [[இந்திரப்பிரஸ்தம்]] இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. [[மௌரியப் பேரரசு]]க் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். [[தொமாரா மரபு|தொமாரா மரபினர்]] கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். [[சௌகான் ராஜபுத்திரர்]] அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை ''கிலா ராய் பித்தோரா'' எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் [[மூன்றாம் பிரிதிவிராஜ்|மூன்றாம் பிரிதிவிராஜை]] 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான [[கோரி முகமது|முகம்மத் கோரி]] தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் [[குலாம் மரபு|குலாம் மரபைத்]] தொடக்கி வைத்த [[குதுப் உத்தீன் அய்பாக்]] தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப் உத்தீன், [[குதுப் மினார்|குதுப் மினாரையும்]], [[குவாத் அல் இஸ்லாம்]] எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய [[பள்ளிவாசல்|பள்ளிவாசலையும்]] கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் [[கில்ஜி மரபு|கில்ஜி]], [[துக்ளக் மரபு|துக்ளக்]], [[சய்யித் மரபு|சய்யித்]], [[லோடி மரபு|லோடி]] ஆகிய [[துருக்கி]]யையும், [[நடு ஆசியா]]வையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல [[கோட்டை]]களையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு [[திமூர் லெங்க்]] எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, [[சூபிசம்|சூபியத்தின்]] முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், [[சாகிருத்தீன் பாபர்]], [[பானிபட் போர் (1526)|முதலாம் பானிப்பட் போரில்]], லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] நிறுவினார். தில்லி, [[ஆக்ரா]], [[லாகூர்]] ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின.
 
முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் [[ஷேர் ஷா சூரி]] என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. [[பேரரசர் அக்பர்]] தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் [[ஷாஜகான்|பேரரசர் சாஜகான்]] ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி [[சாஜகானாபாத்]] எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், [[நாதர் ஷா]], [[கர்னால் போர்|கர்னால் போரில்]] முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு [[மயிலணை]] உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற [[மூன்றாம் பானிப்பட் போர்|மூன்றாம் பானிப்பட் போருக்குப்]] பின், [[அகமத் ஷா அப்தாலி]] தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் [[தில்லிப் போர்|தில்லிப் போரில்]] மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின.
"https://ta.wikipedia.org/wiki/தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது