தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அம்மா சொல் உருவாக்கம்: பிழைத் திருத்தம்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sikkim 1.jpg|thumb|250px|right|ஒரு [[சிக்கிம்|சிக்கிமிய]] தாயும் சேயும்]]
எல்லாத் தாயும் தம் குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டும் ஊட்டி வளர்க்கவில்லை – அதோடு கூடவே அன்பையும் ஊட்டி வளர்க்கிறாள். பால் குடித்து எப்படி தூலம் வளர்கிறதோ அப்படியே மறுபக்கம் அந்தத் தாயின் அன்பால் ஜீவன் என்னப்பெற்ற சிவமும் வளர்கிறது. அதனால்தான் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்றார் னம் முன்னோர். இதையே னபிகள் னாயகம் அவர்கள் “சுவர்க்கம் உன் தாயின் காலடியில் இருக்கிறது” என்றார்கள். ஆனால் தந்தையோ - அன்பை அளவாகவும் கடமையை முழுதாகவும் காட்டியும் உணர்த்தியும் வளர்க்கிறார்.
[[படிமம்:Goat family.jpg|thumb|right|250px|[[ஆடு]]ம் குட்டியும்]]
குருவானவர் கடமையை உணரச் செய்து அன்பை முழுமைப் படுத்தி வைக்கிறார்.
[[படிமம்:MonumentoMadre.JPG|thumb|right|250px|[[மெக்சிக்கோ]] நகரத்தில் உள்ள நினைவுத் தூண் - "நம்மைச் சந்திக்கும் முன்னரே நம்மை நேசிப்பவளுக்காக" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.]]
தெய்வம் கடமையின் காரண கர்த்தாவாகவும் அன்பின் உருவாகவும் இருக்கிறார்.
[[படிமம்:Mother's love.jpg|thumb|right|250px|[[அணில்]] தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]
அன்பைப் பார்க்க விரும்புவோர் முதலில் தங்கள் தாயைப் பார்க்கட்டும். அவளே ரூபத்தில் னினைவூட்ட னிற்கும் அன்பாகும். அகத்தில் னிற்பதுவோ – அன்பு என்ற ஜீவனாகும்
 
[[ஆண்]] - [[பெண்]] என இருபாலினருக்கிடையிலான [[உடலுறவு|பாலுறவின்]] மூலம் பிறக்கும் [[குழந்தை]]க்கு பெண் பாலினமாக இருப்பவர் '''தாய்''' எனப்படுகிறார். [[உயிரியல்]] அல்லது [[சமூகம்|சமூக]] நோக்கில் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் '''தாய்''' (''mother'') அல்லது '''அன்னை''' எனப்படுவார். [[தமிழ்|தமிழில்]] அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.
 
மனிதனைப் போன்ற [[பாலூட்டி]]களில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு [[குழந்தை]]யாக வளர்ச்சி பெறும் வரை தன் [[கருப்பை]]யில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.
 
[[யானை]]களில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் [[உணவு]], பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.<ref>ச.முகமது அலி, பக். 29</ref>
 
== அம்மா சொல் உருவாக்கம் ==
 
தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.
 
தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
 
இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.
 
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள்.
 
ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம். <ref>உலகளாவிய தமிழ் - ம.சோ.விக்டர்.</ref>
 
== மேலும் பார்க்க ==
* [[தந்தை]]
 
== துணை நூற்பட்டியல் ==
* {{cite book
| last = ச
| first = முகமது அலி
| last2 = க
| first2 = யோகானந்த்
| title = யானைகள் அழியும் பேருயிர்
| publisher = மலைபடு கடாம் பதிப்பகம்
| location= மேட்டுப்பாளையம்
| pages = 117
| date= நவம்பர் 2004
| isbn = }}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:பெண்கள்]]
[[பகுப்பு:குடும்பம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது