குரோம்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குரோம்பேட்டை''' சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 45-யில், பல்லாவரத்திற்க்கும், தாம்பரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 4 கீ. மீ. தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] எனும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]], தமிழ் எழுத்தாளர் [[சுஜாதா]] ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர்.
 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் நிறுவியவரும், இந்திய இஸ்லாமியர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான காய்தே மில்லத் இஸ்மாயில் சாகிப் இங்குதான் இருந்தார்.
 
1884ல் இந்தியாவிற்கு வந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ் என்பவர் 1903ம் ஆண்டில் தோல் பதனிடும் தொழிலையை துவக்கினார். தொடர்ந்து, பல்லாவரத்தின் தென்பகுதியில், 1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் 'க்ரோம் லெதர்' கம்பெனி என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை ஜி.ஏ.சேம்பர்ஸ் தொடங்கினார். அதனைத் தொடர்ந்தே அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது.
 
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ல் 20 ஹெக்டர் பரப்பளவில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) எனும் மாநிலத்தின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியிருப்பு மற்றும் வியாபார கட்டடங்கள் பெருகி தற்போது சென்னை புறநகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது.
 
==சூழமைவு==
"https://ta.wikipedia.org/wiki/குரோம்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது