தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Apartheid is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 13:
|dateformat=dmy
|accessdate=28 டிசம்பர் 2007}}
</ref>.
 
வெள்ளையினத் தென்னாப்பிரிக்கா மேலும் மேலும் இராணுவமயமானது. ஐக்கிய அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன், [[அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கம்|அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின்]] ஆயுதப் பிரிவான, [[அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் ஆயுதப் படை]] போன்றவற்றுடன் "எல்லைப் போர்கள்" எனப்பட்ட போர்களிலும் ஈடுபட்டது. இனவொதுக்கல் எதிர்ப்பு அமைப்புக்கள், ஆப்பிரிக்காவின் பிற விடுதலை இயக்கங்களுடன் வலுவான தொடர்புகளைப் பேணி வந்ததுடன், தமது போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான பரந்த சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டன<ref name="ANC definition of apartheid in 1977">{{cite web
வரிசை 22:
|dateformat=dmy
|accessdate=28 டிசம்பர் 2007}}
</ref>.
 
== இனவொதுக்கலின் தோற்றம் ==
=== இனவொதுக்கலுக்கு முந்திய இன வேறுபாடுக் கொள்கையும் குடியேற்றவாதமும் ===
1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், [[நேட்டால்|நேட்டாலிலும்]] 19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்<ref name="countrystudies-15">{{cite web |url=http://countrystudies.us/south-africa/15.htm |title=Africans and Industrialization |accessdate=2008-07-14 |author=U.S. Library of Congress |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=US Federal Research Division of the Library of Congress |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref><ref name="wcupa-his311">{{cite web |url=http://courses.wcupa.edu/jones/his311/lectures/22sa-boe.htm |title=HIS 311 Lecture on Southern Africa 1800-1875 |accessdate=2008-07-14 |author=Jim Jones |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=West Chester University of Pennsylvania |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref><ref>{{cite web |url=http://www.ccds.charlotte.nc.us/History/Africa/04/Jsmith/Jsmith.htm |title=Pass Laws |accessdate=2008-07-14 |author=Jessica Smith |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=Charlotte Country Day School |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref>.
 
1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, [[நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894]], இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் [[லக்டென் ஆணைக்குழு]], [[பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டம்|பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை]] நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அநுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட [[ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906)]] எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அநுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. [[தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910)]] வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. [[நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923)]] தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான [[தொழிலாளர்]]கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் [[ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946)]] ஆகும். இது ஆசியர்களுக்கு [[நிலம்]] விற்பதைத் தடை செய்தது.
 
கேப் குடியேற்றத்திலும், நேட்டாலிலும் கறுப்பினத்தவர், நகர வீதிகளில் இருட்டியபின் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் எப்போதும் அவர்கள் அநுமதிச் சீட்டுக்களையும் வைத்திருக்க வேண்டும். இளம் வழக்கறிஞராக இருந்த [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தி]], நடுத்தர வகுப்பு இந்தியர்களைப் பாதித்த தடைகளுக்கு எதிராக வன்முறை சாராத எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்ததன் மூலம் தனது அரசியல் நடவடிக்கைகளை இக் காலத்தில்தான் தொடங்கினார்.
 
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் [[ஜான் ஸ்மத்ஸ்]] (Jan Smuts) என்பவரின் ஐக்கியக் கட்சி அரசு, பிரிவினைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக இறுக்கம் காட்டாமல் இருந்தது. இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் காலப்போக்கில் நாட்டில் இனக்கலப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில், ஐக்கியக் கட்சியின் கொள்கைகளின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இனத் தொடர்புகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆளுமை இழப்புக்களை உருவாக்கும் என ஆணைக்குழு முடிவு வெளியிட்டது. பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட இனவொதுக்கல் கொள்கை முன்னைய அரசுகளின் இனங்களை வேறுபடுத்தி வைக்கும் கொள்கைகளின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருந்தது.
 
பெண்களுக்கு அநுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
 
== 1948 ஆம் ஆண்டுத் தேர்தலும் குழுப் பகுதிகள் சட்டமும் ==
1948 ஆம் ஆண்டின் தேர்தல் காலத்தில், புரட்டஸ்தாந்த மதகுருவான [[டானியேல் பிராங்கோயிஸ் மாலன்]] என்பவர் தலைமையிலான ஆப்பிரிக்கானர் தேசியவாதக் கட்சி, இனவொதுக்கல் கொள்கைகயை முன்வைத்துப் பரப்புரை செய்தது. தேர்தலில் ஸ்மத்சின் ஐக்கியக் கட்சியைத் தோற்கடித்த இக் கட்சி இன்னொரு ஆபிரிக்கானர் தேசியவாதக் கட்சியான [[ஆப்பிரிக்கானர் கட்சி]]யுடன் சேர்ந்து கூட்டணி அரசொன்றை அமைத்தது. இக்கட்சிகள் பின்னர் [[தேசியக் கட்சி]] என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. மாலன் முதலாவது இனவொதுக்கல் பிரதமர் ஆனார். இக் கூட்டணி உடனடியாகவே இனவொதுக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. கலப்புத் திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மக்கள் இனங்களாகப் பாகுபடுத்தப்பட்டனர். இலக்குழுக்களைப் புவியியல் அடிப்படையில் பிரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, 1950 ஆம் ஆண்டின் [[குழுப் பகுதிகள் சட்டம் (1950)|குழுப் பகுதிகள் சட்டம்]], இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையாக விளங்கியது. 1953 ஆம் ஆண்டு [[வெவ்வேறான பொதுவசதிகள் சட்டம்]] நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தில் கீழ் நகரங்களின் நிலங்கள் குறிப்பிட்ட இனங்களுக்காக மட்டும் ஒதுக்க முடியும். இதன்மூலம், தனித்தனியான [[கடற்கரை]]கள், [[பேருந்து]]கள், மருத்துவ நிலையங்கள், [[பாடசாலை]]கள், [[பல்கலைக் கழகம்|பல்கலைக் கழகங்கள்]] போன்றவை உருவாக்கப்பட்டன. "வெள்ளையருக்கு மட்டும்" எனக் குறிப்பிடும் [[அறிவிப்புப் பலகை]]கள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன.
 
விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. எனினும் இதற்காகத் தனியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், குழுப் பகுதிகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுகளிலும் இனவொதுக்கலை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.
 
அரசு நடைமுறையில் இருந்த அநுமதி அட்டைச் சட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. கறுப்பினத்தவர் வெள்ளையர் பகுதிகளுக்குள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக அவர் கள் எப்போது, அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டனர். நகரங்களில் பணிபுரியும் கறுப்பினத்தவர் அப்பகுதிகளில் வாழ்வதற்கு அநுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அநுமதி இல்லையாதலால், இத்தகைய பணியாட்கள் தமது மனைவி, மக்களைப் பிரிந்தே வாழ வேண்டியதாயிற்று.
 
== நிற இனத்தவரின் வாக்குரிமை பறிப்பு ==
மாலனைத் தொடர்ந்து பிரதமரான [[ஜே. ஜி. ஸ்டிரிஜ்டம்]] (J.G. Strijdom), கேப் மாகாணத்தில் நிற இனத்தவரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னைய அரசு 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், வாக்காளர் தனிப் பிரதிநிதித்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், ஐக்கியக் கட்சியின் ஆதரவுடன் ஜி. ஹரிஸ், டபிள்யூ. டி. பிராங்ளின், டபிள்யூ. டி. கொலின்ஸ், எட்கார் டீனே ஆகிய நான்கு வாக்காளர்கள் அச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். கேப் உச்ச நீதிமன்றம் சட்டம் செல்லுபடியாகும் எனத் தீர்ப்புக் கூறியது. ஆனால், வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வந்தபோது, அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளினதும் கூட்டு அமர்வில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் சட்டம் செல்லாது என அது தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் புறக்கணிக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டமொன்றை அரசு நிறைவேற்றியது. கேப் உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இதையும் செல்லாது எனத் தீர்ப்பு அளித்தன. இதனைத் தொடர்ந்து அரசு புதிய வழிமுறையொன்றைக் கையாண்டது. 1955 ஆம் ஆண்டில், அரசு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் தொகையை ஐந்திலிருந்து பதினொன்றாக உயர்த்தியது. புதிய இடங்கள் தேசியக் கட்சி சார்பானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட "மேல்சபைச் சட்டத்தின்" மூலம் அச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 49 இலிருந்து 89 ஆகக் கூட்டப்பட்டது. இச் சபையில் தேசியக் கட்சிக்கு 77 இடங்கள் இருக்குமாறு செய்யப்பட்டதுடன், 1956 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளினதும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் [[தனிப் பிரதிநிதித்துவ வாக்களர் சட்டம்]] நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கேப் மாகாணத்தில், நிற இனத்தவர்களின் பெயர்களைப் பொது [[வாக்களர் பட்டியல்|வாக்காளர் பட்டியலில்]] இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கெனத் தனியான வாக்களர் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது.
 
== இனவொதுக்கல் சட்டங்கள் ==
வரிசை 50:
 
== இனவொதுக்கல் முறைமை ==
இனவொதுக்கல் பெரும்பாலும் "பெரும் இனவொதுக்கல்", "சிறு இனவொதுக்கல்" இரண்டு பிரிவுகளாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது வழக்கம். பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும், சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது. தேசியக் கட்சி பெரும் இனவொதுக்கல் கொள்கையை 1990கள் வரை இறுக்கமாகப் பின்பற்றி வந்தது. அதே வேளை 1980களில் சிறு இனவொதுக்கல் கொள்கையைக் கைவிட்டுவிட்டது.
 
=== பெரும் இனவொதுக்கல், "தாயக" முறை ===
வரிசை 68:
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/தென்னாபிரிக்காவின்_இனவொதுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது