வைக்கம் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|ml}} →
வரிசை 9:
கைதானவர்களுக்கு ஆதரவினைத் திரட்டி மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், [[மகாத்மா காந்தி]]யை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார். அதன் பிறகு டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனோன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர். இந்தக் குற்றத்திற்காக இருவரையும் காவல்துறை செய்ததுடன் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
 
கைது செய்யப்பட்ட டி. கே. மாதவன் ஈழவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கேரள மாநிலத்திலிருந்த ஈழவர் சாதியைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தில் இறங்கியவர்களுள் முக்கியமானவர் சகோதரர் அய்யப்பன். நியாயமான இப்போராட்டத்திற்கு ஸ்ரீ நாராயண குரு ஆதரவளித்தார். ஸ்ரீ நாராயண குரு தனக்குச் சொந்தமான பேளூர் மடத்தைப் போராட்டக் காரர்கள் தங்குவதற்காக அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயும் அளித்தார். இந்த மடத்தில்தான் மக்கள் ஒன்று கூடி போராட்டத்திற்குச் சென்றனர். டி. கே. மாதவன் கைது செய்யப்பட்டதும், நியாயமான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீ நாராயண குரு தன் கைப்பட ஒரு கடிதமெழுதி அதை மக்களிடையே பரப்பிடச் செய்தார். ஸ்ரீ நாராயண குரு செய்தி கேரளா முழுவதும் சென்றது. கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
 
இப்போராட்டத்திற்காக, ஸ்ரீ நாராயண குருவின் சன்னியாசி சீடர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று உண்டியல் ஏந்திப் பணம் சேகரித்துப் போராட்டக்காரர்களுக்கு அனுப்பினர். அத்துடன் ஒவ்வொரு வீட்டினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் முன்பு பெண்கள் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். இப்படி சேகரிக்கப்படும் அரிசி போராட்டக்காரர்களின் உணவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சமாதானம் ஏற்பட வாய்ப்பு கிட்டுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணம் படைத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் சில வன்முறையாளர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்துத் துன்புறுத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அறவழியிலேயே போராடிக் கொண்டிருந்தனர்.
வரிசை 19:
கேரள மாநிலத்திற்குச் சென்ற காங்கிரசு பேரியக்கத் தலைவர்களில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் பேச்சு கேரள மக்களை அதிகமாகக் கவர்ந்தது. இதனால் அங்கிருந்த காவல்துறையினரால் ஈ. வே. ராமசாமி நாயக்கர் [[1924]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 22]] அன்று கைது செய்யப்பட்டார். அப்போதைய அரசர் உத்தரவின்படி ஒரு மாத கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. இதன்படி அவர் அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையிலடைக்கப்பட்ட பின்னர் பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் விரைந்து சென்று சத்தியாக்கிரகத்தில் குதித்தனர்.
 
தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ. வே. ராமசாமி நாயக்கர் விடுதலையானார். விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்கப்பட்டு திருவாங்கூர் மத்தியச் சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார். இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார். இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் விடுவிக்கப்பட்டார். விடுதலையான ஈ. வே. ராமசாமி நாயக்கர் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.
 
காங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி [[1925]] ஆம் ஆண்டு [[மார்ச் 9]] அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.
வரிசை 39:
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்]]
 
 
{{Link FA|ml}}
"https://ta.wikipedia.org/wiki/வைக்கம்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது