அகத்தியர் தேவார திரட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
மனம் இரங்கிய மகாதேவர், பொதிகைமலை சென்று அகத்திய முனிவரைக் கண்டால், உன் விருப்பம் நிறைவேறும் என்று அசரீரி வாக்கால் உணர்த்தினார். பொதிகை மலை சென்றடைந்த முனிவர், மூன்று ஆண்டுகள் அகத்திய முனிவரை நினைத்து கடும் தவம் புரிந்தார். உரிய காலத்தில் அவருக்குக் காட்சியளித்த அகத்தியர், மூவர் அருளிய அடங்கன் முறை தேவாரப் பாடல்கள் அனைத்தையும் போதித்தார். பின்னர், தினமும் பாராயணம் செய்வதற்கு ஏதுவாக அடங்கன்முறை தேவாரப் பதிகங்களிலிருந்து 25 பதிகங்களை தேர்வு செய்து ஒரு நூலாக தொகுத்தருளினார். அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி எடுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்று பெயர் வந்தது.இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள்,திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும்.மேலும் இப்பதிகங்களை நாள்தோறும் உள்ளம் உருக ஓதின் திரு அடங்கல் முறை ஓதிய பலன் கிடைக்கும் என அகத்தியர் வாக்களித்துள்ளார்,எனவே அகத்தியர் தேவாரத் திரட்டினை தினமும் பாராயணம் செய்வோர்க்கு தீவினை இல்லாத தேனான வாழ்வும் நிறைவில் இறைவன் திருவடி நிழலும் கிட்டும் என்பது நிச்சயம்!
 
அகத்தியர் தேவாரத் திரட்டு எனும் இணைய தேடலுக்கு விளக்கம் வழங்க வாய்ப்பு நல்கிய விக்கிபீடியாவிற்கும்விக்கிபீடியாவிற்கு நன்றி கூறி, தென்கீரனுர் எனும் சிற்றூரில் இருந்து அடியேனை ஆட்சி புரியும் எல்லாம் வல்ல எம்பெருமான் அண்ணாமலையாரின் மலரடிகளை இறைஞ்சுகின்றேன்.
"திருச்சிற்றம்பலம்"
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்_தேவார_திரட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது