பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|ml}} →
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 2:
[[File:பரதநாட்டியப் பெண்.JPG|thumb|பரதநாட்டியப் பெண்]]
[[Image:Indian-dancer-nataraja.png|thumb|250x316px|right|பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம்]]
'''பரத நாட்டியம்''' [[தென்னிந்தியா]]வுக்குரிய, சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்குரிய]] [[நடனம்|நடனமாகும்]]. இது மிகத் தொன்மை வாய்ந்ததும், [[இந்தியா]]விலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர - [[இராகம்|ராகம்]], த - [[தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.   பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm | title=பரதநாட்டியம் | accessdate=அக்டோபர் 30, 2012 | author=ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் [[தேவதாசி முறை|தேவதாசிப் பெண்கள்]] ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
 
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்]] கூட, [[நடராஜர்]] வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் [[பார்வதி]] ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
வரிசை 10:
பரத நாட்டியத்திற்கு பாடல், [[நட்டுவாங்கம்]], மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. [[வீணை]], [[புல்லாங்குழல்]], [[வயலின்]], [[மிருதங்கம்]] ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் [[சலங்கை]]யும் அணிந்திருப்பார்.
 
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், '[[வழுவூர் ராமையா பிள்ளை]]' '[[திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை]]', '[[தனஞ்சயன்]]', '[[அடையார் லக்ஷ்மணன்]]', '[[கலாநிதி நாராயணன்]]' ஆகியோர் குறிப்படத்தக்கவர்குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
 
== வரலாறு ==
வரிசை 118:
=== மங்களம் ===
பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். பாடகரும் பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.
 
== மேற்கோளும் குறிப்புகளும் ==
* [http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm பேராசிரியை. ஞானாம்பிகை குலேந்திரன், பரதநாட்டியம்]
{{reflist}}
 
== இவற்றையும் காண்க ==
* [[தமிழ் நாடக வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது