கொங்கு வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3:
இவர்களின் தொழில் விவசாயம். கடும் உழைப்பாளிகளான இவர்கள் காடுகளை சீர் செய்து விவசாய நிலங்களாக்கினர். தற்போது விவசாயம் அல்லாமல் தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.
== சமுதாய அமைப்பு==
இவர்கள் பல குலங்களாக/ கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஓரே குலத்தை அல்லது கூட்டத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகள். இவர்களுக்குள் அதாவது பங்காளிகளுக்குள் திருமண உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
== திருமண முறை ==
பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த அருமைக்காரர் (பிராமணர் அல்ல) என்பவர் திருமணத்தை நடத்துவார். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். <br>
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
|