சனத்குமாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
 
[[இந்து சமயம் |இந்து சமயப்]] [[புராணங்கள் |புராணங்களில்]] படைப்புக்கடவுள் [[பிரம்மா]] முதன்முதல் படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் '''சனத்குமாரர்'''. மற்ற மூவர் [[சனகர்]], [[சனந்தனர்]], [[சனாதனர்]] என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன்றியவுடனேயே ஆன்மிக அறிவில் சிறந்தவர்களாகிவிட்டனர். பரம்பொருளின் தியானத்தைத் தவிர வேறு எதிலும் அவர்கள் மனம் செல்லவில்லை. புராணங்களில் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசித்ததைப்பற்றி நிறையவே வரும்.
 
==சாந்தோக்ய உபநிடதத்தில்==
[[File:Sage Sanathkumar teaching Narada muni.jpg|thumb|நாரதருக்கு சனத்குமாரர் உபதேசித்தல்]]
 
[[சாந்தோக்ய உபநிடதம் |சாந்தோக்ய உபநிடதத்தில்]] நாரதருக்கும் சனத்குமாரருக்கும் ஒரு நீண்ட உரையாடல் அதன் ஏழாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அது பூமா வித்தை என்ற [[வேதாந்தம் |வேதாந்தக்]] கருத்து. அல்பமான பொருளில் சுகம் கிடையாது; அநந்தமான பரம்பொருளில் தான் சுகம் என்பதை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசிக்கிறார்.
 
==மகாபாரதத்தில்==
[[File:Sage Sanathkumara teaches King Dhirutarashtra.jpg|thumb|[[விதுரன்|விதுரனின்]] வேண்டுதலுக்கு இணங்க சனத்குமாரர், [[திருதராட்டிரன்|திருதராட்டிரனுக்கு]] உபதேசித்தல்]]
 
[[குருச்சேத்திரப் போர்]] தொடங்குவதற்கு முன் பேரரசன் [[திருதராட்டிரன்|திருதராஷ்டிரனுக்கு]] அவர் உடன்பிறந்த [[விதுரன்]] பல நீதிகளை எடுத்துரைக்கும் ஓரிரவு. (இந்த நீதிகள் அடங்கியதுதான் '[[விதுர நீதி]]' என்று புகழ் பெற்ற நூல்). அதில் 'சாகாநிலை' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் விதுரர். திருதராஷ்டிரருக்கு தன் 100 புத்திரர்களும் போரில் சாகாநிலையை அடையவேண்டும் என்ற அவா. இதனால் தூண்டப்பட்டு தனக்கு இறவாநிலையைப் பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். விதுரர் தன் யோகசக்தியினால் தேவலோகத்திலிருந்த சனத்குமாரரை உடனே அழைக்க அவர் திருதராஷ்டிரரின் கேள்விகளுக்கெல்லாம் விவரமாக பதில் சொல்லுகிறார். இது [[மகாபாரதம் |மகாபாரதத்தின்]] உத்தியோகபர்வத்தில் ஒரு மூன்று அத்தியாயமாக விவரிக்கப்படுகிறது. இம்மூன்று அத்தியாயங்களுக்கு '[[சனத்சுஜாதீயம்]]' என்று பெயர். வேதாந்த தத்துவங்கள் வெகு எளிமையாக விளக்கப்பட்டிருக்கும் நூல்.
 
"https://ta.wikipedia.org/wiki/சனத்குமாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது