அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்==
[[விராட பருவம்|விராட பருவத்தில்]], [[அருச்சுனன்]] [[உத்தரன்|உத்தரனிடம்]] தனது பத்து சிறப்புப் பெயர்களை அதற்கான காரணத்துடன் கூறுகிறான்.
*தனஞ்சயன்: தான் வெற்ற எதிரி நாட்டு செல்வங்களால் நிரம்பிப் பெற்றவனாக நான் இருந்ததால், தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
*விஜயன்: எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு நான் திரும்பியதில்லை என்பதால், விஜயன் என்று அழைக்கிறார்கள்.
*சுவேதவாகனன்: எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்.
*பல்குனன்: பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் நான் பிறந்ததால் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
*கிரீடி: ஒரு முறை [[தேவர்|தேவர்களின்]] எதிரிகளான [[அசுரர்|அசுரர்களை]] வென்றமையால், ஒரு கிரீடத்தை [[இந்திரன்]] எனது தலையில் சூட்டியதால், கிரீடி என்று பெயர் பெற்றேன்.
*பீபத்சு: போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், பீபத்சு என்று அறியப்படுகிறேன்.
*சவ்யசச்சின்: [[காண்டீவம்]] எனும் வில்லைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் சவ்யசச்சின் (சவ்யசாசி) என்று அறியப்படுகிறேன்.
*அர்ஜுனன்: எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
*ஜிஷ்ணு: அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், [[இந்திரன்|இந்திரனின்]] மகனாகவும் இருப்பதால்நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
*கிருஷ்ணன்: எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் என்பது, கரிய நிறத் தோல் கொண்ட என் மீது பாசம் கொண்ட எனது தந்தை ([[பாண்டு|பாண்டுவால்]]) எனக்கு வழங்கப்பட்டதாகும். <ref>http://mahabharatham.arasan.info/p/blog-page_8070.html#sthash.fAFuh81d.dpuf</ref>
==பகவத் கீதை உபதேசம்==
|