இராமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| Abode = [[அயோத்தி]]}}
 
'''இராமர்''' இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் [[திருமால்|திருமாலின்]] ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குலத்தின் கோசல நாட்டின் தலைநகர்குல [[அயோத்தி|அயோத்தியின்]] அரசர் [[தசரதன்|தசரதனின்]] நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் [[இலக்குவன்]], [[பரதன்]], [[சத்ருக்கனன்சத்ருகனன்]] ஆவர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[திரேதா யுகம்|திரேதா யுகத்தில்]] பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
 
கி.மு 4 ஆம் நூற்றாண்டுகள் அளவில் [[வால்மீகி]] எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண இதிகாசத்தின் முக்கியக் கதை மாந்தர் ஆவார். இராமரைக் கடவுளாக [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களில் ஒருசாரர் நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக [[விஷ்ணு]]வின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இராமனை அவதாரமாகக் கருதாமல் சிறப்பானவராகக் (Supreme Being) கருதும் பிரிவுகளும் உண்டு. ராமர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் இந்திய வரலாற்றில் இருந்தாரா என்பது பற்றி பல ஆராய்ச்சிகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு.
வரிசை 26:
=== ராமர் அவதாரம் ===
[[File:Horoscope of Lord Ram.jpg|right|thumb|250px|ராமரின் ஜாதகம்]]
[[தசரதன்]] என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு [[கோசலை]], [[கைகேயி]], [[சுமத்திரை]] என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். புத்திரபேறுக்கான யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி [[கோசலை]] ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் [[இராமன்|இராமராகப்]] பிறந்தார். இரண்டாம் மனைவி [[கைகேயி]] வயிற்றில் [[பரதன்]] பிறந்தான். மூன்றாம் மனைவி [[சுமத்திரை]] வயிற்றில் [[இலக்குவன்]], [[சத்துருக்கன்]] என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
 
=== விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தல் மற்றும் தாடகை வதம் ===
[[விசுவாமித்திரர்]] என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். [[தாடகை]] முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். முனிவர் பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசம் செய்தார்.
 
இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.
 
=== மிதிலை நகர் செல்லுதலும் திருமணமும் ===
 
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை]] சென்றார். [[சனகன்]] என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் [[சீதை|சீதையைத்]] திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை|மதிலைக்குச்]] செல்லும் வழியில் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாக கிடந்த [[அகலிகை]] மீது இராமரின் திருவடி பட்டதால், சாபம் நீங்கி மீண்டும் உண்மை உருவிற்கு வந்தாள்.
மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
 
பிறகு [[விசுவாமித்திரர்]] இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு [[மிதிலை]] சென்றார். [[சனகன்]] என்ற மன்னன் மிதிலையை ஆண்டு வந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் [[சீதை|சீதையைத்]] திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான். மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.
 
=== பட்டாபிஷேக ஏற்பாடுகளும் காடேகுதலும் ===
வரி 41 ⟶ 43:
 
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான். காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அதுவரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
 
==காட்டில் சான்றேர்களின் தொடர்பு==
இராமர் காட்டில் வாழும் காலத்தில் [[குகன்]], [[பாரத்துவாசர்]], [[அகத்தியர்]], [[சபரி (இராமாயணம்)|சபரி]] போன்ற சான்றேர்களின் தொடர்பு கிடைத்தது.
 
=== சூர்ப்பனகையின் மூக்கறுத்தல் ===
[[இலங்கை|இலங்கையை]] ஆண்டு வந்த [[இராவணன்]] என்னும் [[அரக்கன்]] தங்கை [[சூர்ப்பனகை]] ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான். சூர்ப்பனகை அழுது கொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லாமல், `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்து விட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
 
=== மாயமான் ===
"https://ta.wikipedia.org/wiki/இராமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது