சின்னஞை சிறுசின்னஞ்சிறு ஆண் குழந்தைகள் எழுந்து நடக்கும் பருவத்தில் ஆடையின்றித் திரிவர். அக் குழந்தை தன் ஆண்குறியைத் தானே தொடாமல் இருப்பதற்காக அதன் அரைஞாண் கயிற்றில் சில தொங்கல்களைக் கோத்திருப்பர். குழந்தை அதனைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். தன் குறிகளைத் தொடாதிருக்க அரைஞாணில் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தத் தொங்கலுக்குக் குறியிறை என்று பெயர்.
====உவமை====
யானைக் குழவி சிறிதாக இருக்கும்போது சின்னஞ்சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். அதுவே பெருதானபெரிதான பிறகு அவர்களும் பெரியவர்கள் ஆகி அவர்கள் விதைத்த தினையை மேயும் பகையாக மாறிவிடும். அதுபோலத் தலைவன் தலைவியோடு நகைத்துக்கொண்டு விளையாடிய காதல் விளையாட்டு பகையாக மாறிவிட்டதாம்.