பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pariyur.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per [[:c:Commons:D
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
{{merge#redirect to|[[பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்}}]]
{{Infobox Mandir
| name = பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்
| image =
| image_size = frameless
| image_alt =
| caption =
| pushpin_map = India Tamil Nadu
| map_caption =
| latd = 11
| latm = 28
| lats = 39
| latNS = N
| longd = 77
| longm = 27
| longs = 22
| longEW = E
| coordinates_region = IN
| coordinates_display= title
| other_names =
| proper_name = அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்
| devanagari = श्री कोंदथू काली अम्मन मंदिर
| sanskrit_translit =
| tamil = அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில்
| marathi =
| bengali =
| country = {{IND}}
| state =[[தமிழ்நாடு]]
| district = [[ஈரோடு]]
| location = [[பாரியூர்]], [[கோபிசெட்டிபாளையம்]]
| elevation_m =
| primary_deity = கொண்டத்து காளியம்மன்
| important_festivals= மார்கழி தேர்த்திருவிழா, பொங்கல், நவராத்திரி
| architecture =திராவிடக் கட்டடக்கலை
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
| date_built =
| creator =
| website = [http://www.pariyurkondathukaliamman.tnhrce.in/ www.pariyurkondathukaliamman.tnhrce.in]
}}
 
 
'''அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில்''' (Pariyur Kondathu Kaliamman) தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் [[கோபிச்செட்டிப்பாளையம்]] அருகில் பாரியூரில் அமைந்துள்ள அம்மன் திருக்கோயில். கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் 3 கி.மீ தொலைவிலுள்ளது. இது கொங்கு நாட்டின் பிரசித்தி பெற்ற அம்மன் தலம் ஆகும். இக்கோவிலின் அருகாமையில் ஸ்ரீ அமரபனீஸ்வரர் கோவில், ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.
 
==மரபு வரலாறு==
இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. கடையேழு வள்ளர்களில் ஒருவரான [[பாரி]]யால் ஆளப்பட்டு வந்தமையால், "பாரியூர்" என்று பெயர் மாற்றப் பெற்றது. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் வள்ளல் [[பாரி]] ஆன்டு வந்த ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.
 
=== தலவரலாறு ===
இக்கோவிலின் வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றது. ஆனால் தற்போது உள்ள கோவில் 1950களில் கட்டப்பட்டது. இங்குள்ள அம்மன் சிலை சூரராசச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது {{ஆதாரம் தேவை}}. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான [[பாரி]]யின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, "பாரியூர்" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.
 
கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்தார். கருணை கொண்ட அம்பிகை புலிப்புதரில் புலிக்குப் பதிலாக பொற்காசுகள் கொண்ட முடிப்பு இருக்கும்படிச் செய்தாள். அவர் அம்மனின் கருணையை எண்ணி வியந்து பொன்முடிப்பை எடுத்துச் சென்று மீண்டும் கொடையளித்தார்.
 
இத்திருக்கோயிலின் துணைக்கோயிலான அமரப்பணீஸ்வரர் கோயிலிலிருந்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாரியூர் முன்பு சிறப்பான நகரமாக இருந்ததாம். பின்பு நடந்த அந்நியப் படையெடுப்பால் மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். புலம்பெயர்ந்து சென்ற இடங்கள் இன்றும் பாரியூர் வெள்ளாளபாளையம் என்றும் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் என்றும் அறியப்படுகிறது. படையெடுப்பின் போது அம்மன் சிலையைப் பகைவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. பின் தடப்பள்ளி வாய்க்கால் வெட்டப்பட்டு பாரியூர்ப் பகுதி வயல்வெளியானது. வெகுநாட்களாக சிறு கோயிலாக இருந்து பின் திருப்பணிச்செம்மல் தங்கமணிமுத்துவேலப்பக் கவுண்டர் அவர்களின் பெருமுயற்சியாலும் அறநிலையத்துறையின் ஒத்துழைப்பாலும் தற்போதுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் திருக்கோயில் கரும்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் பிற வரலாற்றுத் தகவல்கள் காலவெள்ளத்தில் அழிந்து விட்டன.
 
==கோவில் கட்டமைப்பு==
இக்கோவிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்து உள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக்கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது. கோவிலின் தூண்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு சிங்கத்தின் வாயில் காணப்படும் பந்து வடிவிலான ஒற்றைக்கல். அம்மனின் பிராதன வாகனமாக சிங்கம் கருதப்படுகிறது. அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும் காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அம்மனின் தலையில் ''ருத்ரன்'' உள்ளதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் ஸ்ரீ பொன் காளியம்மன், சித்தி விநாயகர் மற்றும் ஏழு கன்னிமார் சிலைகளும் கானப்படுகின்றன. அது தவிர ஸ்ரீ மகா முனியப்பனின் மாபெரும் சிலை ஒன்றும் காணப்படுகின்றது. இவர் குழந்தை வரம் அளிப்பதோடு அல்லாமல், பயத்திலிருந்தும் தீய சக்திகளிடத்திலிருந்தும் மக்களைக் காப்பாற்றி வருவதாக நம்பப்படுகிறது. இரு சந்நிதிகளிலிருந்தும் அளிக்கப்படும் தாயத்துகள் மக்களை தீய சக்திகளிடத்திலிருந்தும் நோய்களிலிருந்தும் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. இவற்றைத் தவிர காவல் தெய்வம், பிரம்மா மற்றும் இன்னும் பல சிலைகள் காணப்படுகின்றன. இக்கோவிலில் பிராமினி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்னவி, மஹேந்த்ரி மற்றும் சாமுண்டி ஆகியோரது சிலைகளும் காணப்படுகின்றன. "சின்ன அம்மன்" என்று அழைக்கப்படும் உற்சவர் சிலையும் இங்கு உள்ளது.
 
==பூஜை அட்டவணை==
காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். காலை 6.15 மணி, 11.15 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் அம்மனுக்கு அபிஷேகம் நடை பெரும். 7 மணி, 9 மணி, 10.30 மணி, 12 மணி, 5 மணி, 7 மணி என்று 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.
 
==சிறப்பு வழிபாடுகள்==
முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு மக்கள் அம்மனிடம் "வாக்கு கேட்டல்" முறையைக் கடைபிடிக்கின்றனர். அம்மன் சிலையின் இரு பக்கங்களிலும் பூக்கள் வைத்து எப்பக்கத்திலிருந்து பூ கீழே விழுகின்றது என்பதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிறப்பு நாட்களில் அம்மனைச் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரிக்கின்றனர். திருவிழாவில் குண்டம் இறங்குதல் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் குண்டம் இறங்குவர். குண்டத்திற்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை அன்னை ராஜராஜேஸ்வரியாக புஷ்பத்தேரில் எழுந்தருள்வாள். திருவிழாவில் சிறப்பம்சம் இதுவே.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* http://temple.dinamalar.com/New.php?id=773
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]