'''கடுகண்ணாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] ஒரு நகரசபையாகும்நகரம் ஆகும். இது [[யட்டிநுவரை]] [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து [[மேற்கு]]த் திசையில் அமைந்துள்ளது. இலங்கையின் மலைநாட்டுக்கு நுழையும் கணவாய் கடுகண்ணாவையில் அமைந்துள்ளது. இந்நகரம் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தின்]] காலத்தில் முக்கிய நுழவாயிலாகவும் பாதுகாப்பு கோட்டையாகவும் விளங்கியது. மிகவும் கடினமான புவியியல் அமைப்பைக் கொண்ட இப்பகுதியூடாக இரயில் மற்றும் பெருந்தெருவை அமைத்த ஆங்கிலேய பொறியியலாளர் டாவ்சன் என்பவரை கௌரவிக்கும் வகையில் இங்கு ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.