'''ஏரி காத்தஏரிகாத்த ராமர் கோயில்''' (Eri-Katha Ramar Temple), [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. [[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[இராமனுஜர்]] இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>