சங்கரரின் சீடராக ஆவதற்கு முன் '''[[மந்தன மிஸ்ரர்''']] என்ற பெயரில், [[மீமாம்சம்|மீமாம்ச]] தத்துவவாதியாக இருந்த [[கிரகஸ்தம்|இல்லறத்தவர்]]. சங்கரருடன் நடந்த [[தருக்கம்|விவாதப் போட்டியில்]] தோல்வியடைந்த மந்தன மிஸ்ரர், இல்லறத்தை விட்டு, [[சந்நியாசம்|துறவறம்]] மேற்கொண்டு, சங்கரரை தனது [[குரு|குருவாக]] ஏற்றுக் கொண்டவர். ஆதிசங்கரர் உரை எழுதிய [[உபநிடதம்|உபநித]] நூல்களுக்கு சுரேஷ்வரர் நீண்ட விளக்க உரைகள் எழுதியுள்ளார். எனவே இவரை '''வார்த்திககாரர்''' (நீண்ட விளக்க உரையாசிரியர்) என்பர். [[சிருங்கேரி|சிருங்கேரி சாரதா பீடத்தை]] நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக விளங்கியவர்.