சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது என்பது ஒரு கொள்கை. இல்லை இது திராவிட மொழிக்கான(தமிழ்) எழுத்து வடிவமேயென்பது இரண்டாவது கொள்கை.
 
===திராவிடமொழி எடுகோள்===
[[ஆஸ்கோ பர்போலா]], [[ஐராவதம் மகாதேவன்]] போன்ற ஆராய்ச்சி யாளர்கள் [[சமஸ்கிருதம்]], கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த [[ஆரியர்]]களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான [[ரிக் வேதம்]] நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற [[நகரப் பண்பாடு]] ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான [[குதிரை]], சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.
 
===சமசுக்கிருத எடுகோள்===
சமஸ்கிருதக் கொள்கையின் ஆதரவாளர்கள், [[சமஸ்கிருதம்]] [[இந்தியா]]விலேயே தோன்றி வளர்ந்ததென்று காட்டமுற்படுகிறார்கள். ஆனால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சான்றுகளின்படி சிந்துவெளி வரிவடிவங்களில் [[தமிழ் பிராமி]] வரிவடிவங்களை நோக்கிய வளர்ச்சி காணப்படுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இக் கடைசிக் கூற்றுச் சரியாயின், தமிழ் பிராமி எழுத்துக்களே [[முதல்நிலைத் திராவிட மொழி]]யொன்றுக்காகத் தோன்றியிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்று. இன்றைய அளவில் அது நிருபணம் செய்யப்பட்டும் விட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது