'''ஆர். சிவலிங்கம்''' (பிறப்பு: 25 சூன்மே 1935) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். '''உதயணன்''' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து [[பின்லாந்து]] நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் தற்போது [[கனடா]]வில் வாழ்ந்து வருகிறார். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு உரைநடையில் கலேவலா ஆர். சிவலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது<ref>{{cite web | url=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0143_01.html | title=உரைநடையில் கலேவலா | publisher=மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் | date=1999 - 2003 | accessdate=3 ஆகத்து 2015}}</ref>.